கல்வி உதவி தொகை.. பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்..என்னென்ன தகுதிகள்
சென்னை: பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியர் கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி தெரிவித்துள்ளார்.

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியர்களுக்கான கல்வி உதவித்தொகை இணையதளம் வாயிலாக புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் வருகிற டிசம்பர் 6ம் தேதிக்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி வெளியிட்ட அறிவிப்பில், அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ், கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது.
அரசு, அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிவ/ மிபிவ/ சீம மாணவ, மாணவியருக்கு இலவச கல்வி திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ,2,50,000க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியர்களுக்கான கல்வி உதவித்தொகை இணையதளம் வாயிலாக புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் வருகிற டிசம்பர் 6ம் தேதிக்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
அதேபோல் புதிய இனங்களுக்கு இணையதளம் வருகிற 15ஆம் தேதி முதல் செயல்பட துவங்கும். புதிய இனங்களுக்கான விண்ணப்பங்கள் ஜனவரி 20ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.
https://www.bcmbcmw.tn.gov.in/welfschemes, htm#scholarship schemes என்ற அரசு இணையதளத்திலும் இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் உள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications