பிக்பாஸ்:சங்கியா என கேலி பேசிய மங்கிக்கு கரிபூசிய ஜிபி முத்து.. ட்வீட்டில் கமலை தாக்கிய எஸ்வி சேகர்?
சென்னை: மகன் உடல்நலத்தை காரணம் கூறி பிக்பாஸ் வீட்டில் இருந்து ஜிபி முத்து வெளியேறி உள்ளார். இந்நிலையில் ஜிபி முத்து காவி துண்டு அணிந்திருப்பது போன்ற போட்டோவை பாஜகவின் எஸ்வி சேகர் ட்விட்டரில் பதிவிட்டு ‛‛நீ சங்கியா என கேலி பேசிய மங்கிக்கு முகத்தில் கரிபூசி நம் மனதில் உயர்ந்து நிற்கின்றார்'' என ஜிபி முத்துவை புகழ்ந்துள்ளார். மேலும் இந்த ட்வீட்டில் அவர் கமல்ஹாசனை தாக்கி பேசினாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் என மொத்தம் 20 பேர் பங்கெடுத்துள்ளனர்.
இதில் ஒருவர் தான் ஜிபி முத்து. டிக்டாக் மூலம் பிரபலமடைந்த இவருக்கு தமிழ்நாடு முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது.

முதல் போட்டியாளராக..
‛‛செத்தப்பயலே'' எனும் வார்த்தை மூலம் தமிழ்நாட்டின் பெரு நகரங்கள் முதல் சிறு கிராமங்கள் வரை அனைவருக்கும் பரீட்சயமான நபராக மாறிப்போனார். இந்நிலையில் தான் ஜிபி முத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக நுழைந்தார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதாலே கடந்த ஐந்து சீசனை பார்க்காதவர்கள் கூட இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க தொடங்கினர்.

இணையதளங்களில் டிரெண்ட்
அதேபோல் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தனது இயல்பை மாற்றாமல் தனது இயல்பான பேச்சு மற்றும் செயல்பாட்டால் ஜிபிமுத்து அனைவரையும் கவர்ந்து வருகிறார். மேலும் அவரது பெயரில் சமூக வலைதளங்களில் புதிதாக அக்கவுண்ட்கள் துவங்கப்பட்டு அவர் சார்ந்த வீடியோக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. இதுவும் இணையதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.

ஆதாம்-ஏவாள் காமெடி
குறிப்பாக முதல் நாளில் கமல் கூறிய ஆதாம், ஏவாள் கதையை கேட்ட ஜிபி முத்து ஆதாமா? அது யாரு? என கமலிடம் திரும்ப கேள்வி எழுப்பி அவரையே விழிபிதுங்க வைத்த வீடியோவுக்கு இன்று வரை தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளது. மேலும் அவர் அவ்வப்போது கொடுக்கும் ரியாக்சன்கள், தூத்துக்குடி வட்டார வழக்கில் அவர் பேசும் வார்த்தைகளின் வீடியோக்கள் இணையதளங்களில் குவிந்து வந்தன.

குடும்ப நியாபகம்
இந்நிலையில் தான் சில நாட்களாக ஜிபி முத்து தனது குடும்பத்தை விட்டு பிரிந்து இருப்பதை நினைத்து மனம் வருந்தி வருகிறார். மேலும் குடும்பத்தை பிரிந்து பிக்பாஸில் பங்கேற்ற முடியவில்லை. குழந்தைகளின் நியாபகமாகவே உள்ளது. அவர்களை பார்க்க வேண்டும் என ஜபி முத்து கூறி வருகிறார். இதனால் தீபாவளிக்கு அவரை காண குடும்பத்தினர் வரலாம் என்ற தகவல்கள் பரவின.

மகனை கூறி வெளியேறினார்
இதுதொடர்பாக ஜிபி முத்து நடிகர் கமல்ஹாசனிடம் கூறினார். எனக்கு என் பையனை பார்க்க வேண்டும். வீட்டு போகிறேன் என 5 நாட்களாக சொல்லிட்டே இருக்கிறேன். பையனுக்கு உடல்நலம் சரியில்லை. நான் பிக்பாசுக்கு வந்த பிறகு கூட முடிந்தவரை தான் இருப்பேன் என கூறிவிட்டு வந்தேன். என்னால் முடியவில்லை. என் பிள்ளை மீது தான் உயிராக இருக்கிறேன். எல்லோரும் என்னை மன்னிச்சிடுங்க.. பணம், காசை விட என் பிள்ளைகள் தான் முக்கியம் என வளர்ந்துவிட்டேன் என கூறினார். இதையடுத்து ஜிபி முத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

எஸ்வி சேகர் ட்விட்
இந்நிலையில் பாஜக கட்சியை சேர்ந்த எஸ்வி சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜிபி முத்துவை பெருமையாக கூறி பதிவு ஒன்று செய்துள்ளார். அதில் நெற்றியில் குங்குமம், சந்தனத்துடன், கழுத்தில் காவி துண்டு அணிந்துள்ள ஜிபி முத்துவின் படத்தை எஸ்வி சேகர் பதிவிட்டுள்ளார். மேலும், அந்த பதிவில், ‛‛ நீ சங்கியா என கேலி பேசப்பட்டவர், 100 நாள் வேலை வாய்ப்புத் திட்ட பணத்தைவிட தன் மகன் மேல் வைத்திருக்கும் பாசமே மேல் என நிரூபித்து, கேலி பேசிய மங்கிக்கு முகத்தில் கரிபூசி நம் மனதில் உயர்ந்து நிற்கின்றார்'' என குறிப்பிட்டுள்ளார்.

ட்வீட்டுக்கான காரணம் என்ன?
முன்னதாக சில நாட்களுக்கு முன்பு ஜிபி முத்துவுக்கு ரசிகர்கள் அனுப்பிய கடிதத்தை சக போட்டியாளரான அஜீம் படித்து காட்டினார். அதில், ‛‛தலைவரே பிக்பாஸ் வீட்டில் சிங்கியா? சொங்கியா? மங்கியா? என்று வினா எழுப்பப்பட்டு இருந்தது. இதனை கேட்டு ஜிபி முத்து பதிலளிக்காமல் நிற்க கமல்ஹாசனோ "இன்னொன்றை விட்டுவிட்டார்களே! எனக்கும் அதான் தோன்றியது" என்று கூற, இன்னொரு போட்டியாளரான அமுதவாணன், சங்கி மங்கி என்ற சொன்னார். இதனை குறிப்பிட்டு தான் எஸ்வி சேகர் தற்போது ட்வீட் செய்துள்ளார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications