ரயில்வேயில் இந்தி திணிப்பு.. காலைல இருந்து வாய் திறக்கவில்லை.. சாவகாசமாக வந்து ட்வீட் போட்ட தமிழிசை
ரயில்வேயில் இந்தி திணிப்பு வாபஸ் பெறப்பட்ட பின்னர் தமிழிசை ட்வீட் போட்டுள்ளார்
Recommended Video
சென்னை: இந்தி கட்டாயம் என்று சொன்னதில் இருந்தே தமிழ்நாடே ரணகளமாயிட்டு இருந்தது.. அப்போவெல்லாம் வாய் திறக்காமல், 'வாபஸ்' என்றதும் சாவகாசமாக ட்வீட் போட்டு கருத்து சொல்லி உள்ளார் தமிழிசை சவுந்தராஜன்!
இன்னைக்கு பொழுது விடிந்ததே சரியில்லை.. இந்தியில்தான் பேசணும் என்று ரயில்வேயின் அறிவிப்பு தமிழக மக்களை நிலைகுலைந்து போக வைத்துவிட்டது.

மத்திய அரசின் அறிவிப்புகளுக்கு இப்படி கடிவாளமே இல்லாமல் போய்கொண்டிருக்கிறதே என்று மக்கள் தவிப்பில் இருந்தனர். அரசியல் தலைவர்கள் பொங்கி எழுந்துவிட்டனர். இணையதளமே கண்டனங்களால் சூடாக தகித்தது.
பிறகு தமிழகத்தின் முற்றுகை, கண்டனம், எதிர்ப்பு என்பதை எல்லாம் பார்த்த மத்திய அரசு அந்த அறிவிப்பை வாபஸ் பெற்று கொண்டுவிட்டது. காலை முதல் கொதிப்பில் கிடந்த போதெல்லாம் தமிழக பாஜக தலைமை மவுனமாகவே இருந்தது. ஒரு பேச்சுமூச்சையும் காணோம்.
வாபஸ் என்றதும் தமிழிசை சவுந்தராஜன் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில், "இன்று மத்திய இரயில்வே அமைச்சகத்தினை தொடர்புகொண்டு..தென்னக இரயில்வே சார்பில்.. வெளியிட்டுருப்பதாக... உள்ள அறிவிப்பு.. (ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில்தான்.. கருத்துகள் பரிமாற்றிக் கொள்ளவேண்டும்) என்ற அறிக்கையை திரும்பப் பெறவேண்டும்.. என வலியுறுத்தப்பட்டது.... எந்தவகையிலும்.. இந்தி திணிக்கப்படாது.." என்று பதிவிட்டுள்ளார்.
இன்று மத்திய இரயில்வே அமைச்சகத்தினை தொடர்புகொண்டு..தென்னக இரயில்வேசார்பில்..வெளியிட்டுருப்பத்தாக...உள்ள அறிவிப்பு..(ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில்தான்..கருத்துகள்பரிமாற்றிக்கொள்ளவேண்டும்)என்ற அறிக்கையை திரும்பப்பெறவேண்டும்..என வலியுறுத்தப்பட்டது....எந்தவகையிலும்..இந்திதிணக்கப்படாது..
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) June 14, 2019
இந்தியில்தான் பேச வேண்டும் என்றபோது, இதே தமிழிசை ஏன் கருத்து சொல்லவில்லை என்று தெரியவில்லை. விவகாரத்தை அறிந்து.. கொதிப்பு சூழல் அடங்கிய பிறகு.. கருத்து போட வேண்டிய அவசியமும் ஏன் என்று தெரியவில்லை.
ஆனால் ஒன்றுமட்டும் தெரிகிறது... மாநில தலைமையை பரிசீலிக்காமலும், முக்கியமான விஷயத்தை தெரிவிக்காமலும்தான், இப்படிப்பட்ட அறிவிப்புகளை பாஜக தலைமை நடத்தி வருகிறது போலும்!
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications