ஆஸ்துமா உள்ளவர்கள் கோவிட் தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாமா? மருத்துவர்கள் விளக்கம்
சென்னை: ஆஸ்துமா உள்ளவர்கள், நுரையீரல் பலவீனமாக உள்ளவர்கள் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
Recommended Video
ஆஸ்துமா நோய் உள்ளவர்கள், நீண்ட காலமாக அதற்கான மருந்து எடுத்து வருகிறார்கள். அவர்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா என்பது குறித்து கொரோனோ நோய் சிறப்பு மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

இது பற்றி மருத்துவர்கள் கூறுகையில், ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டால் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு. இணை நோய் உள்ளவர்களுக்கான பட்டியலில் ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்கள் இடம் பெறுவார்கள்.
எனவே கட்டாயமாக ஆஸ்துமா உள்ளவர்களோ, நுரையீரல் வீக்காக உள்ளவர்களோ கட்டாயமாக தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
ஏனெனில் ஆஸ்துமா உள்ளவர்களுக்கு கொரோனா வந்தால் தான் தாக்குதல் அதிகமாக இருக்கும். ஒவ்வாமை பிரச்சனை இல்லாதவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications