இரவு நேர லாக்டவுன், முழு லாக்டவுனை ரத்து செய்யுங்கள்... முதல்வருக்கு விக்ரமராஜா மீண்டும் கோரிக்கை
வணிகர்களின் நலன் கருதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரமைப்பு முதல்வருக்கு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னை: கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டுமே தீர்வு அல்ல என்பதை முதல்வர் முக ஸ்டாலின் கருத்தில் கொண்டு தமிழகத்தில் நடைமுறையில் உள்ள இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு ஆகியவற்றை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வணிகர்கள் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கோரிக்கை வைத்துள்ளார்.
கொரோனா பாதிப்பு அதிகரிப்பதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஞாயிற்றுக் கிழமையும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்ட நிலையில் இந்த ஞாயிற்று கிழமையும் முழு ஊரடங்கிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஊரடங்கு அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று வணிகர்கள் சங்க பேரமைப்பின் தலைவர் ஏ.எம் விக்கிரமராஜா, முதல்வர் ஸ்டாலினுக்கு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் இன்று விடுத்துள்ள கோரிக்கையில், தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனாவால் வணிகர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இரண்டு தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்று பரவலை தடுக்க மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் சுயக்கட்டுப்பாடு மட்டுமே அவசியம் என கருதப்படுகிறது.
தடுப்பூசி நடவடிக்கை, பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவற்றின் அடிப்படையில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின், ஜெர்மனி, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்டுள்ளன.
எனவே கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டுமே தீர்வு அல்ல என்பதை முதல்வர் முக ஸ்டாலின் கருத்தில் கொண்டு தமிழகத்தில் நடைமுறையில் உள்ள இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு ஆகியவற்றை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று விக்கிரமராஜா, முதல்வருக்கு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அண்டை மாநிலமான கர்நாடகாவில் வார இறுதி நாட்களில் அமல்படுத்தப்பட்டிருந்த லாக்டவுன் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் ஞாயிறு ஊரடங்கை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
-
தமிழகத்தின் முதல் பெண் உளவுத் துறை டிஜிபி! போதை பொருள் தடுப்பு ஸ்பெஷலிஸ்ட்! யார் இந்த பாலநாகதேவி? -
Toll price: தமிழகத்தில் ஏப்ரல் 1 முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! Fastag கட்டணமும் உயர்கிறது! மக்கள் அதிர்ச்சி! -
ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல்.. மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.. தேர்தல் ஆணையம் -
இடி, மின்னலுடன் மழை.. ரெடியா இருங்க மக்களே! வானிலை மையம் ஜில் அப்டேட் -
LPG shortage: நயினார் நாகேந்திரன் கேஸ் டீலர்னு சொன்னாலும் சொன்னார்! அப்பாவு கிண்டலை பாருங்களேன்! -
சென்னையில் 100 டிகிரியை தொடும் வெயில்! வார்னிங் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
DMK Alliance: 42/234! இதுவரை திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு? -
"ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை.." சென்னையில் மூடப்படும் பெட்ரோல் பங்குகள்.. உண்மையில் என்ன காரணம்! -
வெயில் மண்டையை பொளக்கப்போகுது.. வார்னிங் கொடுத்த வானிலை மையம்! இந்த மாவட்டங்கள் உஷார் -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications