கூண்டில் அடைப்பட்ட கிளி எஜமானவர்களுக்கு சேவை செய்கிறது... சிபிஐ ரெய்டு பற்றி ஜோதிமணி எம்பி தாக்கு
சென்னை: ப சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் வீடுகளில் இன்று சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் ‛‛கூண்டில் அடைக்கப்பட்ட கிளி எஜமானர்களுக்கு சேவை செய்கிறது'' என மத்திய அரசையும், சிபிஐயையும் மறைமுகமாக கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி விமர்சனம் செய்துள்ளார்.
Recommended Video
காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம். இவரது மகன் கார்த்தி சிதம்பரம். இவர் எம்பியாக உள்ளார். இந்நிலையில் இன்று காலையில் ப சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பர் ஆகியோரின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் ரெய்டு துவக்கினர்.
காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதிமந்திரியுமான ப. சிதம்பரத்தின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய பல இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சோதனை ஏன்
கார்த்தி சிதம்பரம் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் 2010-14 காலக்கட்டத்தில் பஞ்சாபில் மின் திட்டம் ஒன்றில் சீனர்களை பணியமர்த்தும் வகையில் 250க்கும் அதிகமானவர்களுக்கு விசா கிடைக்க ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடிப்படையில் தான் தற்போது சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொள்வதாக கூறப்படுகிறது. முதலில் 7 இடங்களில் சோதனை நடந்ததாக கூறப்பட்ட நிலையில் மொத்தம் 10 பகுதிகளில் சோதனை நடந்தது. இதில் பல இடங்களில் சோதனை நிறைவு பெற்றுள்ளது.

எதுவும் கைப்பற்றவில்லை
ரெய்டு குறித்து ப சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர், ‛‛இன்று காலை சிபிஐ குழு சென்னை மற்றும் டெல்லியில் உள்ள அலுவலக இல்லத்தில் சோதனை மேற்கொண்டது. சோதனை தொடர்பாக காண்பிக்கப்பட்ட முதல் தகவல் அறிக்கையில்(எப்ஐஆர்) குற்றவாளியாக என் பெயர் இடம்பெறவில்லை. சோதனை குழு வீட்டில் இருந்து எதையும் கண்டுபிடிக்கவில்லை. கைப்பற்றவும் இல்லை. இந்த சோதனையின் நேரமானது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் '' என தெரிவித்துள்ளார்.

எஜமானர்களுக்கு சேவை
இதுபற்றி கரூர் காங்கிரஸ் எம்பி தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது பதிவில், ‛‛கூண்டில் அடைக்கப்பட்ட கிளி எஜமானர்களுக்கு சேவை செய்கிறது. இவர்கள் விதிகளை பின்பற்ற வேண்டியது இல்லை. இருப்பினும் இது நம்மை தடுத்து நிறுத்தாது'' என ப சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் பெயர்களை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

விமர்சனம் ஏன்?
சிபிஐ, அமலாக்கத்துறையினரை மத்திய அரசு கட்டுப்படுத்தி வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் தான் ஜோதிமணி எம்பி இவ்வாறு பதிவிட்டுள்ளார். இதன்மூலம் மறைமுகமாக சிபிஐயை மத்திய அரசு கட்டுப்படுத்துவதாகவும், மத்திய அரசுக்காக சிபிஐ செயல்படுவதாகவும் அவர் விமர்சனம் செய்துள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications