சென்னை: நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, ஜூலை 22ம் தேதி ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்தில் இருந்து செலுத்தப்பட்ட சந்திரயான் 2 விண்கலம் தனது பணியை முழுமையாக செய்ய முடியாமல் போனது இந்திய மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சந்திரயான்-2ல் மொத்தம் மூன்று முக்கிய கலன்கள் இடம் பெற்றிருந்தன. சந்திரயான் விண்கலத்தின், 'விக்ரம்' தரையிறங்கும் கலன் சுற்றுவட்டக் கலனிலிருந்து கடந்த 2ம் தேதி வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. இந்த கலமானது இன்று அதிகாலையில் நிலவின் தரைப்பரப்பில் இறங்கும் முயற்சியை மேற்கொண்டபோது துரதிர்ஷ்டவசமாக நிலவின் தரைப்பரப்பிலிருந்து 2.01 கிலோமீட்டர் உயரத்தில் இருந்தபோது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
லேன்டர் விக்ரமுக்கு என்ன நேர்ந்தது என்பது தெரியவில்லை. பெரும் வரலாற்றைக் காண ஆவலாக காத்திருந்த நாட்டு மக்களுக்கு இது பெரும் சோகத்தையும் ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளது. அதேசமயம், ஆர்பிட்டர் தொடர்ந்து நல்ல நிலையில் செயல்பட்டு வருவதால் திட்டம் தோல்வி அல்ல என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
Sep 07, 2019, 8:42 am IST
கண்ணீர் மல்கிய இஸ்ரோ தலைவர் சிவனை கட்டியணைத்து முதுகில் தட்டி கொடுத்தார் மோடி.
இஸ்ரோவில் உரையாற்றிவிட்டு மோடி வெளியேறியபோது உணர்ச்சி மிகு தருணம்.
மிக விரைவில் ஒரு புதிய விடியலும் பிரகாசமும் இருக்கும்.
அறிவியலில் தோல்வி என்பதே இல்லை, அறிவியல் என்பது ஆய்வு மற்றும் முயற்சிகள் மட்டுமே - மோடி உரை.
Sep 07, 2019, 8:16 am IST
இன்று சில தடைகள் ஏற்பட்டுள்ளன, ஆனால் அது நமது உறுதியை பலவீனப்படுத்தாது.
இந்த தடைகள் நம்மை பலவீனப்படுத்துவதற்கு பதிலாக நம்மை பலப்படுத்துகிறது - மோடி உரை.
Sep 07, 2019, 8:16 am IST
விஞ்ஞானிகளே கவலை வேண்டாம், இந்தியா உங்களோடு இருக்கிறது - மோடி பேச்சு
Sep 07, 2019, 8:11 am IST
பாரத் மாதா கி ஜெய்.. என்ற கோஷத்துடன் இஸ்ரோவிலிருந்து நாட்டு மக்களிடம் மோடி உரை ஆரம்பம்
Sep 07, 2019, 8:10 am IST
சந்திரயான் 2 திட்டத்தின் நிலை குறித்து மோடி பேச்சு
பெங்களூர் இஸ்ரோ மையத்திற்கு மீண்டும் பிரதமர் மோடி வருகை.
விஞ்ஞானிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு, நாட்டு மக்களிடம் மோடி உரையாற்ற திட்டம்.
Sep 07, 2019, 8:03 am IST
இன்னும் சில நிமிடங்களில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை.
சந்திரயான் 2 லேண்டருடனான தொடர்பை விஞ்ஞானிகள் இழந்தது பற்றி உரை.
Sep 07, 2019, 6:12 am IST
இஸ்ரோவின் சந்திரயான்-2 முயற்சிக்கு ராகுல் காந்தி வாழ்த்து.
உங்கள் பணி வீணாகாது என்று ராகுல் காந்தி நம்பிக்கை.
Sep 07, 2019, 6:08 am IST
காலை 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்துகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
சந்திராயன்-2 லேண்டர் உடன் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் உரையாற்றுகிறார்.
#ISRO Honorable Prime Minister Shri. Narendra Modi will address the nation from ISRO Control Centre today (September 07, 2019) at 0800 hrs IST.@PMOIndia@narendramodi
எல்லோருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
நாம் இந்த பயணத்தை தொடர்வோம்.
நான் உங்களுடன் இருக்கிறேன் -மோடி.
#WATCH PM Narendra Modi at ISRO: There are ups and downs in life. This is not a small achievement. The nation is proud of you. Hope for the best. I congratulate you. You all have done a big service to nation, science and mankind. I am with you all the way, move forward bravely. pic.twitter.com/Iig1a8EuKD
நாடு உங்களை நினைத்து பெருமை கொள்கிறது.நாம் மீண்டும் முயற்சி செய்வோம் - பிரதமர் மோடி
Sep 07, 2019, 2:23 am IST
நம்பிக்கையாக இருங்கள் - பிரதமர் மோடி
Sep 07, 2019, 2:23 am IST
இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் பிரதமர் மோடி பேசி வருகிறார்
Sep 07, 2019, 2:21 am IST
தைரியமாக இருங்கள் - இஸ்ரோ அதிகாரிகள் நம்பிக்கை
Sep 07, 2019, 2:18 am IST
2.1 கிமீ வரை விக்ரம் லேண்டர் சரியாக இறங்கியது. அதன்பின் விக்ரம் லேண்டர் உடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. டேட்டாக்களை சோதனை செய்து வருகிறோம்.தொடர்ந்து ஆலோசனை நடந்து வருகிறது- இஸ்ரோ இயக்குனர் சிவன்.
Sep 07, 2019, 2:14 am IST
மிக மிக பதற்றமான நிலையில் இஸ்ரோ கண்காணிப்பு மையம்
Sep 07, 2019, 2:11 am IST
சற்று முன் ஆர்பிட்டரில் இருந்து சிக்னல் கிடைத்திருப்பதாக தகவல்
Sep 07, 2019, 2:11 am IST
சிக்னல் பிரச்சனை சரியானது: சந்திரயான் 2 உடன் மீண்டும் தொடர்பு
Sep 07, 2019, 2:07 am IST
இஸ்ரோ மிஷன் சென்டரில் இருந்து பிரதமர் மோடி வெளியேறினார்
Sep 07, 2019, 2:02 am IST
விக்ரம் லேண்டர் மற்றும் இஸ்ரோ கண்ட்ரோல் அறைக்கு இடையில் தொலைதொடர்பில் சிக்கல்.
Sep 07, 2019, 2:01 am IST
பிரதமர் மோடியிடம் அதிகாரிகள் விளக்கம் அளித்து வருகிறார்கள்.
Sep 07, 2019, 1:59 am IST
சந்திரயான் 2 வை நிலவில் தரையிறக்குவதில் தாமதம்
Sep 07, 2019, 1:53 am IST
நிலவில் இருந்து வெறும் 1 கிமீ தூரத்தில் உள்ளது சந்திராயன் 2. இனி சந்திரயான் 2 மெதுவாக இறங்கும்
Sep 07, 2019, 1:51 am IST
நிலவில் இருந்து வெறும் 3 கிமீ தூரத்தில் உள்ளது சந்திராயன் 2. நிலவை நெருங்கியது சந்திரயான் 2 லேண்டர்
Sep 07, 2019, 1:50 am IST
நிலவில் இருந்து வெறும் 7 கிமீ தூரத்தில் உள்ளது சந்திராயன் 2
Sep 07, 2019, 1:48 am IST
நிலவில் இருந்து 25 கிமீ தூரத்தில் உள்ளது சந்திரயான் 2
Sep 07, 2019, 1:47 am IST
நிலவை நோக்கி மிக வேகமாக இறங்கி வருகிறது சந்திரயான் 2. 4 எஞ்சின்கள் இயங்குவதால் வேகமாக இறங்கி வருகிறது.
Sep 07, 2019, 1:47 am IST
நிலவில் இருந்து 120 கிமீ தூரத்தில் உள்ளது சந்திரயான் 2
Sep 07, 2019, 1:45 am IST
நிலவில் இருந்து 130 கிமீ தூரத்தில் உள்ளது சந்திரயான் 2
READ MORE
11:57 AM, 4 Sep
சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டரில் (சுற்றுவட்டக்கலன்) இருந்து விக்ரம் லேண்டர் செப்டம்பர் 2ம் தேதி வெற்றிகரமாக பிரிந்தது.
#ISRO Vikram Lander Successfully separates from #Chandrayaan2 Orbiter today (September 02, 2019) at 1315 hrs IST.
இன்று அதிகாலை 3.42 மணியளவில் விக்ரம் லேண்டர் நிலவுக்கு மிக அருகில், 36 கி.மீ. தூரத்திலும், 110 கி.மீ. தொலைவிலும் சுற்றுமாறு கொண்டு வரப்பட்டது. 7ம் தேதி அதிகாலை 1.30 மணிக்கு தொடங்கி 2.30 மணிக்குள் விக்ரம் லேண்டர் இன்னும் அருகே கொண்டு வரப்படும். அதையடுத்து அது மெதுவாக நிலவின் தென்பகுதியில் தரை இறங்கும்.
#ISRO The second de-orbiting maneuver for #Chandrayaan spacecraft was performed successfully today (September 04, 2019) beginning at 0342 hrs IST.
சந்திரயான் -2 அதன் முந்தைய சந்திரயான்-1 விண்கலத்தைவிட புதிய உயரங்களை தொடர்போகிறது. இதுகுறித்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் என்று இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் கேட்டுள்ளது.
சந்திரனில் சாஃப்ட் தரையிறக்கத்தை நிகழ்த்திவிட்டால், சந்திரனில் தரையிறங்கும் நான்காவது நாடாக இந்தியா மாறும். இது இந்திய விண்வெளி ஆய்வு வரலாற்றில் ஒரு மைல் கல்லாக மாறும்.
4:28 PM, 5 Sep
பெங்களூரிலுள்ள இஸ்ரோ தலைமையகத்தில் உள்ள விஞ்ஞானிகள் மத்தியில், சந்திரயான்-2 நிலவில் தரையிறங்குவது பற்றி பரபரப்பு இருந்தபோதிலும், மிஷன் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை நிலவுவதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
6:28 PM, 5 Sep
இந்தியாவின் சந்திரயான் -2 திட்டம், வரலாற்று புத்தகங்களில் இடம்பெறத் தக்கது என்று அமெரிக்காவின் முன்னணி ஊடகம் சிஎன்என் செய்தி சேனல் வெப்சைட் வர்ணித்துள்ளது
1:04 PM, 6 Sep
சந்திரயான் 2 நிலவில் இறங்க உள்ள நிலையில், இன்று ககன்யான் திட்டத்திற்கு ஆள் எடுக்கும் பணி தொடங்கியது. ககன்யான் திட்டம் மூலம் விண்வெளிக்கு இஸ்ரோ மனிதர்களை அனுப்புகிறது
#MissionGaganyaan -IAF completed Level-1 of Indian Astronaut selection at Institute of Aerospace Medicine. Selected Test Pilots underwent extensive physical exercise tests, lab investigations, radiological tests, clinical tests & evaluation on various facets of their psychology. pic.twitter.com/RKidla7Bzc
சந்திரயான் 2 குறித்து உருக்கமான டிவிட் செய்த இஸ்ரோ.
ஆர்பிட்டார் - விக்ரம் லேண்டர் பிரிவு குறித்து இஸ்ரோ சுவாரசியமான டிவிட்.
We have the same wishes for Vikram, Orbiter. Want to stay in touch with Vikram and Pragyan as they make their way to the untouched lunar South Pole and uncover its many mysteries? Then keep an eye out for the next edition of #CY2Chronicles! pic.twitter.com/2iA8W2lxtR
"வேறு யாரும் சென்றிராத ஒரு இடத்தில் நாங்கள் தரையிறங்கப் போகிறோம். சாஃப்ட் தரையிறக்கம் செய்வோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. நாங்கள் இன்றிரவுக்காக காத்திருக்கிறோம்" என்று இஸ்ரோ தலைவர் கே சிவன் தெரிவித்துள்ளார்.
Indian Space Research Organisation (ISRO) Chairman K Sivan to ANI on #Chandrayaan2Landing: We're going to land at a place where no one else has gone before. We're confident about the soft landing. We're waiting for tonight. (File pic) pic.twitter.com/rfBLWnKgJp
சந்திரயான் 2, சனிக்கிழமை அதிகாலை 1:55 மணிக்கு சந்திர மேற்பரப்பில் தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது. நிலவு, லேண்டர் விக்ரம், இன்று அதிகாலை 1:30 மணி முதல் அதிகாலை 2:30 மணிக்குள், நிலவை தொடும். இதற்காக லேண்டரின் உயரத்தை இதற்கு முன்பு இருமுறை குறைத்துள்ளனர். ரோவர் பிரக்யான், லேண்டரிலிருந்து அதிகாலை 5:30 மணி முதல் வெளிப்பட தொடங்கும்.
5:44 PM, 6 Sep
மும்பையில், சந்திரயான்-2 தீம் முறையில் விநாயகர் சதுர்த்தி பந்தல் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன
சந்திரயான் 2ன் மென்மையான-தரையிறக்கம் இஸ்ரோவின் வலைத்தளம் உட்பட பல தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும். இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் ஹேண்டிலில் நேரலை வெளியிடும். இஸ்ரோவைத் தவிர, தூர்தர்ஷன் (டி.டி) அதன் யூடியூப் சேனலில் சந்திரயான் 2 தரையிறங்குவதை நேரடியாக ஒளிபரப்ப உள்ளனர். நேஷனல் ஜியோகிராஃபிக் யூடியூப் சேனல் மற்றும் ஹாட்ஸ்டாரில் இந்தியாவில் நேரலை பார்க்க முடியும்.
10:00 PM, 6 Sep
நிலவில் சந்திரயான் 2 விண்கலம் தரையிறங்குவதை பார்ப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரு விமான நிலையம் வந்தார். அவரை கர்நாடகா முதல்வர் எடியூரப்பா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்- பெங்களூருவில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையம் செல்லும் பிரதமர் மோடி, அங்கு மாணவர்களுடன் அமர்ந்து இன்று இரவு நிலவில் சந்திரயான் 2 விண்கலம் இறங்குவதை பார்வையிடுகிறார்.
Karnataka: Prime Minister Narendra Modi arrives at Bengaluru Airport; received by CM BS Yeddiyurappa. He will reach ISRO centre in Bengaluru tonight ahead of landing of #Chandrayaan2 on the moon. pic.twitter.com/Bc9RngfjPl
சந்திரயான் 2 நிலவில் தரையிறங்க உள்ள நிலையில் பெங்களூர் இஸ்ரோ தலைமையகத்தில் விஞ்ஞானிகள் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். கடைசி கட்ட பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள்
சந்திரயான் 2 நிலவில் இறங்குவதை பார்க்க பிரதமர் மோடி இஸ்ரோ தலைமையகம் வந்துள்ளார். விஞ்ஞானிகளுடன் சேர்ந்து மோடி சந்திராயன் 2 தரையிறங்குவதை பார்க்கிறார்
Karnataka: PM Modi at the #ISRO Centre in Bengaluru to watch the soft landing of Vikram lander on South Pole region of moon. 60 students from across the country, who were selected through ISRO's 'Space Quiz' competition will watch the landing along with PM. #Chandrayaan2pic.twitter.com/e166MErF9X
The second de-orbiting maneuver for Chandrayan 2 spacecraft was performed successfully today, beginning at 3:42 am as planned, using the on-board propulsion system. The duration of the maneuver was 9 seconds.