அவசர பாஸ் வழங்கும் நடைமுறையில் மாற்றம்... மாவட்ட ஆட்சியர்களுக்கு மட்டுமே இனி அதிகாரம்
சென்னை: ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பொதுமக்களுக்கு அவசர பாஸ் வழங்கப்பட்டு வந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வந்துள்ளது தமிழக அரசு.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், திருமணம், இறப்பு, மருத்துவம் ஆகிய மூன்று தேவைகளுக்காக மட்டும் பொதுமக்களுக்கு அவசர பாஸ் வழங்கப்பட்டு வந்தது. இதனை மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள், தாசில்தார்கள், உள்ளிட்டோர் வழங்கி வந்தனர். இந்நிலையில் இனி மேற்கொண்டு தாசில்தார்களிடம் இருந்தோ, நகராட்சி ஆணையர்களிடம் இருந்தோ அவசர பாஸ் பெற முடியாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அதனை பொருட்படுத்தாமல் மக்கள் அதிகளவில் வெளியே சுற்றுவதால் இந்த அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளது தமிழக அரசு. இது தொடர்பாக தலைமைச் செயலாளர் சண்முகம் பிறப்பித்துள்ள உத்தரவில், பொதுமக்களுக்கு அவசர பாஸ் வழங்கும் விவகாரத்தில் தாசில்தார்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்றும், அதிகமான எண்ணிக்கையில் மக்கள் சாலைகளில் நடமாடுவதாகவும் கூறியுள்ளார்.
இதனால் பழைய நடைமுறைப்படி மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள் மூலம் மட்டுமே இனி பொதுமக்களுக்கு அவசர பாஸ் விநியோகிக்கப்படும் என்றும், இதன் மூலம் பொதுமக்கள் நடமாட்டம் குறையும் என தாம் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். சென்னை பாடி, வேலூர், உள்ளிட்ட பகுதிகளில் நேற்று அதிகளவில் பொதுமக்கள் வெளியே சுற்றித் திரிந்ததை அடுத்து அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது தமிழக அரசு.
இதன் மூலம் இனி நினைத்த நேரத்தில் அருகாமையில் உள்ள தாசில்தார்களை அனுகி பாஸ் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே மாநிலங்களில் மக்கள் நடமாட்டத்தை குறைக்குமாறு முதல்வர்களுக்கு கானொலி மூலம் பிரதமர் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications