வருகிறது சிங்கார சென்னை 2.0 திட்டம்.. மேம்பாலங்கள், மெட்ரோ நீட்டிப்பு.. சென்னைக்கு ஸ்பெஷல் அறிவிப்பு
சென்னை: 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் சென்னை நகரம் சார்ந்த திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video
பட்ஜெட் கூட்ட தொடர் இன்று தொடங்கி செப்.21ம் தேதி வரை நடைபெறுகிறது. நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.
தமிழகத்தில் முதல்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

3 இடங்களில் மேம்பாலங்கள்
தனது பட்ஜெட் உரையில், சென்னைக்கு முக்கியத்துவம் தந்து சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதோ அதுகுறித்த ஒரு ஹைலைட்ஸ்:
சென்னையில் 3 இடங்களில் ரூ.335 கோடியில் புதிய மேம்பாலங்கள் அமைக்கப்படும். சென்னையில் கணேசபுரம் சுரங்கப்பாதை, கொன்னூர் நெடுஞ்சாலை, தெற்கு உஸ்மான் சாலை என மூன்று இடங்களில் ரூ.335 கோடியில் புதிய மேம்பாலங்கள் அமைக்கப்படும்.

சிங்காரச் சென்னை
சிங்கார சென்னை 2.0 திட்டம் தொடங்கப்படும். இந்த திட்டத்தின்கீழ், சென்னையில் பொது இடங்களில் சுவரொட்டிகள் இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையுடன் இணைந்த பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்துக்கு ரூ.2,056 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
பொது இடங்களில் சுவரொட்டிகள் இல்லாத நகரமாக சென்னை மாற்றப்படும்.

சென்னை மெட்ரோ ரயில்
2026ம் ஆண்டு டிசம்பருக்குள் சென்னை மெட்ரோ ரயில் 2ம் திட்டம் முடிக்கப்படும். சென்னை விமான நிலையத்தில் இருந்து தாம்பரம் வழியாக கிளம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்கும் பணி விரைவாக தொடங்கப்படும்.

பூந்தமல்லி மெட்ரோ
சென்னை பூந்தமல்லி - கோடம்பாக்கம் இடையே மெட்ரோ சேவையை 2025ல் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒரகடத்தில் மருத்துவ சாதனங்கள் பூங்கா & திருவள்ளுரில் மின் வாகன பூங்கா ஏற்படுத்தப்படும். இவ்வாறு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். அதேநேரம், கோவை, மதுரை ஆகிய அடுத்தகட்ட நகரங்களின் வளர்ச்சி குறித்த பார்வையையும் பட்ஜெட்டில் வெளிப்படுத்தினார் நிதித்துறை அமைச்சர்.

கோவை, மதுரை மெட்ரோ
ஆம்.. கோவை மெட்ரோ ரயில் அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்றும், மதுரையில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் ஆராயப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சிங்காரச் சென்னை திட்டம் என்றால் என்ன?
1996-2001ல் கருணாநிதி தலைமையில் திமுக அரசு நடைபெற்றபோது, சென்னை மாநகராட்சியின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமை ஸ்டாலினுக்கு கிடைத்தது. அப்போது கருணாநிதி அரசின் ஒத்துழைப்புடன் சிங்காரச் சென்னை உருவாக்கும் பணியினை மேற்கொண்டு 10 சிறுமேம்பாலங்கள் கட்டப்பட்டன. பொதுமக்களின் பயன்பாட்டுக்காக பூங்காக்கள் சீரமைக்கப்பட்டும் உருவாக்கப்பட்டது. முன்பெல்லாம் சென்னையில், வீடுகள், உற்பத்தி நிறுவனங்கள், பிற சேவை நிறுவனங்களிலிருந்து குப்பைகளை சேகரித்து அகற்றுவதற்கான கட்டமைக்கப்பட்ட மற்றும் அறிவியல் முறை இல்லை. வீட்டுக் கழிவுகள் தெருவில் வீசப்பட்டு, ஒவ்வொரு தெருவிலும் மலை மலையாக குவிந்து காணப்பட்டன. இதனால், அந்த காலகட்டட்த்தில், நகரத்தில் கொசு தொல்லை அதிகமாக இருந்தது. சென்னை என்றாலே நாற்றமும், கொசுவும்தான் மக்களுக்கு நினைவுக்கு வந்தது. மிகவும் அசுத்தமான நகர பட்டியலில் சென்னை இரண்டாம் இடம் வகித்தது. இந்த நிலையில்தான் சிங்கார சென்னை திட்டத்தின் மூலம், இந்த நிலை மாற்றப்பட்டு இப்போதுள்ள சென்னைக்கு அடிக்கோல் நாட்டப்பட்டது. இந்த நிலையில்தான், சிங்காரச் சென்னை 2 திட்டத்தை கையில் எடுப்போம் என பட்ஜெட்டில் அரசு அறிவித்துள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications