லாக்டவுன் ஓபன் பண்ணதும் இப்படியா? சென்னையில் துணிக்கடை தந்த அடடே ஆபர்.. குவிந்த கூட்டம்.. சீல்!
சென்னை: சென்னையில் துணிக்கடை ஒன்றின் முன் மக்கள் கூட்டம் அலைமோதிய காரணத்தால் அங்கு தற்போது அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் உயர்ந்து வரும் நிலையிலும் கூட லாக்டவுன் தளர்வுகள் அமலுக்கு வந்து இருக்கிறது.தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து தொடங்கி உள்ளது. இ பாஸ் மாவட்டங்களுக்கு இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பிவிட்டது என்று கூறலாம். மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. சென்னையில் அனைத்தும் செயல்பாட்டிற்கு வந்து இயல்புநிலை திரும்பி உள்ளது.

சென்னை எப்படி
இந்த நிலையில் சென்னையில் துணிக்கடை ஒன்றின் முன் மக்கள் கூட்டம் அலைமோதிய காரணத்தால் அங்கு தற்போது அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தியாகராய நகரில் பல்வேறு துணிக்கடைகள் உள்ளது. அங்குதான் இந்த கடையும் அமைந்துள்ளது. கடை சில வாரங்களுக்கு முன் கட்டுமான பணிகள் முடிந்த நிலையில், இன்று இந்த கடை திறக்கப்பட்டது.

அதிரடி ஆபர்
புதிதாக கடை திறக்கப்பட்ட நிலையில், மக்களை கவரும் வகையில் நிறைய அதிரடி ஆபர்கள் போடப்பட்டது. உதாரணமாக ஒரு பேண்ட் 50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஜீன்ஸ் 60 ரூபாய்க்கு விற்கப்பட்டது. டி சர்ட் 8 ரூபாய்க்கு விற்கப்பட்டது. பல்வேறு விலைகளில் துணிகள் ஆபரில் விற்கப்பட்டது. அதிலும் 100 ரூபாய்க்கும் குறைவான விலையில் நிறைய துணிகள் விற்கப்பட்டது.

அதிரடி சலுகை
இப்படி அதிரடி சலுகைகள் கொடுத்த காரணத்தால் காலையிலேயே அந்த கடை முன் மக்கள் கூட்டம் குவிந்தது. இவ்வளவு பேர் வருவார்கள் என்று அந்த கடை ஊழியர்கள் கூட எதிர்பார்க்கவில்லை. அங்கு மொத்தமாக மக்கள் கூட்டம் கூடி முண்டி அடிக்க தொடங்கினார்கள். சமூக இடைவெளி இன்றி மக்கள் நெருக்கமாக வரிசையில் நிற்க தொடங்கினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சீல் வைத்தனர்
இதையடுத்து போலீசாருக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது . இதையடுத்து அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் அந்த புதிய கடைக்கு சீல் வைத்தனர். விதிமுறைகளை மீறியதாகவும், மக்கள் கூட்டம் கூட வழி செய்ததாகவும் கூறி கடைக்கு சீல் வைத்தனர். அதோடு போலீசார் அங்கிருந்த கூட்டத்தை கலைத்தனர்.
-
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
சென்னையின் தலையெழுத்தை மாற்றும் ப்ராஜெக்ட்.. ரெடியாகும் 'ரூட் மேப்'... எகிறப்போகும் வேகம்! -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும்












Click it and Unblock the Notifications