கும்மிருட்டு! தனியே நின்று லிப்ட் கேட்ட பெண்.. வண்டியை நிறுத்திய வாகன ஓட்டி.. சட்டென நடந்த ட்விஸ்ட்!
சென்னையில் லிப்ட் கேட்டு தனியே நின்ற பெண் மீது இரக்கப்பட்டு வண்டியை நிறுத்தியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
சென்னை: சென்னை சாலைகளில் லிப்ட் கேட்டு இரவு நேரங்களில் பெண் கையை நீட்டினால் ஆபத்து அழைக்கிறது என்று அர்த்தமாகும்.
சென்னை கொடுங்கையூரை சேர்ந்தவர் கணேஷ்குமார். இவர் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். கடந்த மாதம் 24 ஆம் தேதி வேலையை முடித்துக் கொண்டு செங்குன்றத்தில் இருந்து தனது வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
புழல் அருகே கணேஷ் குமார் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு இருட்டில் தனியாக நின்றிருந்த பெண் ஒருவர் கணேஷ்குமாரிடம் லிப்ட் கேட்டுள்ளார். நடுராத்திரி என்பதால் இரக்கப்பட்ட கணேஷ்குமார் வாகனத்தை அந்த பெண் அருகே நிறுத்தினார்.
சென்னையில் தினமும் குடியேறி வரும் வடமாநிலத்தவர்கள்! இது நமக்கு ஆபத்து! கே.என்.நேரு எச்சரிக்கை!
எங்கே செல்ல வேண்டும்
இதையடுத்து எங்கே செல்ல வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார். அதற்கு அந்த பெண் நீட்டி முழக்கி ஏதோ ஒரு இடத்தை கூறியுள்ளார். அந்த இடம் குறித்து கணேஷ் குமார் புரிந்து கொள்வதற்குள் பின்னால் இருந்து வந்த ஒரு இளைஞர் கணேஷ்குமாரின் கழுத்தில் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இதனால் கணேஷ் குமார் ஒன்றும் புரியாமல் விழித்தார்.
பணத்தை கேட்ட காதலன்
பின்னர் அந்த இளைஞர், கையில் இருக்கும் பணத்தை கொடுக்குமாறு கணேஷ்குமாரிடம் கேட்டுள்ளார். அதற்கு கணேஷ் குமார் அதிர்ச்சி அடைந்து தன்னிடம் பணம் எதுவும் இல்லை என கூறியுள்ளார். பின்னர் அவரிடம் இருந்த செல்போனை பறித்த அந்த இளைஞர் அந்த பெண்ணை அழைத்து கொண்டு இரு சக்கர வாகனத்தில் பறந்துவிட்டார்.
வழிபறி
அப்போதுதான் அந்த பெண்ணுக்கும் இந்த வழிபறியில் பங்குண்டு என்பதையும் லிப்ட் கேட்டது எல்லாமே இந்த ஜோடியின் பிளான் என்பதையும் அறிந்தார். இதையடுத்து அந்த காதல் ஜோடி குறித்து புழல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகார் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புழல் போலீஸார்
இந்த நிலையில் புழல் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஆணும் பெண்ணும் போலீஸை பார்த்ததும் தப்பியோடினர். அவர்களை போலீஸார் துரத்தி பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் பெயர் அபினேஷ், வாணி என்பது தெரியவந்தது. புழல் பகுதியை சேர்ந்தவர் அபினேஷ் என்றும் கண்ணகி நகரை சேர்ந்த வாணி என்பது தெரியவந்தது.
ஆடம்பரம்
இருவரும் ஆடம்பரமான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இரவு நேரங்களில் தனியாக வரும் ஆண்களை குறி வைத்து லிப்ட் கேட்பது போல் நடித்து அவர்களிடம் இருந்து பணம் ,நகை, போன் உள்ளிட்டவற்றை பறித்து சென்றதும் தெரியவந்தது. இந்த ஜோடிதான் கணேஷ்குமாரிடம் செல்போனை பறித்தது என்பது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் இது போல் பல வழிப்பறிகளில் ஈடுபட்டது தெரியவந்தது.