Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்ன ஒரு மரியாதை! அமைச்சர் சேகர்பாபுவை கண்டதும் எழுந்து நின்ற சென்னை மேயர்! அரசு விழாவில் ருசிகரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில், அமைச்சர் சேகர் பாபு மேடையேறி வருவதை கண்ட மேயர் பிரியா ராஜன் சட்டென எழுந்து நின்று கொண்டார்.

இதனிடையே மேடையில் முதல்வர் இருப்பதால் சுதாரித்துக்கொண்ட மேயர் ப்ரியா ராஜன், அமைச்சர் சேகர்பாபு அமர்வதற்கு முன்பே தனது இருக்கையில் அமர்ந்துகொண்டார்.

மேயர்களை பற்றி முதல்வர் ஸ்டாலின் எப்போது பேசினாலும் 'வணக்கத்திற்குரிய மேயர் அவர்களே' என அந்தப் பதவிக்குரிய மரியாதையை முழுமையாக வழங்குவார்.

அரசு விழா

அரசு விழா

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மனநலம் மற்றும் உடல்நலம் சார்ந்த விழிப்புணர்வு தொடக்க விழாவானது சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மா.சுப்ரமணியன், சேகர்பாபு, சென்னை மேயர் ப்ரியா ராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். விழா மேடையில் முதல்வர் ஸ்டாலின் அம்ர்ந்திருக்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வரவேற்று பேசிக்கொண்டிருந்தார்.

 சென்னை மேயர்

சென்னை மேயர்

அப்போது மேடைக்கு வந்த அமைச்சர் சேகர்பாபுவை பார்த்ததும் சென்னை மேயர் ப்ரியா ராஜன் சட்டென எழுந்து நின்று கொண்டார். மேடையில் முதல்வர் இருப்பதால் இது போல் செய்யக்கூடாது என்பதை உணர்ந்து சுதாரித்துக் கொண்ட அவர், அமைச்சர் சேகர்பாபு அமர்வதற்கு முன்பே தனது இருக்கையில் அமர்ந்துகொண்டார். அமைச்சர் சேகர்பாபு மீதான தனது விசுவாசத்தையும், மரியாதையையும் அரசு விழாவில் வெளிப்படுத்தும் விதமாக நடந்துள்ளார் மேயர் ப்ரியா ராஜன்.

கட்சி நிகழ்ச்சிகள்

கட்சி நிகழ்ச்சிகள்

பொதுவாக கட்சி நிகழ்ச்சிகளில் தான் இது போன்ற நிகழ்வுகளை பார்க்க முடியும். அரசு விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் மேயராக இருப்பவர்கள் தங்களது பதவிக்குரிய கம்பீரத்துடன் அமர்ந்திருப்பது தான் வழக்கம். மேயர்களை பற்றி முதல்வர் ஸ்டாலின் எப்போது எந்த நிகழ்ச்சியில் பேசினாலும் 'வணக்கத்திற்குரிய மேயர் அவர்களே' எனக் குறிப்பிடுவதுடன் அந்தப் பதவிக்குரிய மரியாதையை முழுமையாக வழங்குவார். ஏனெனில் அவரும் மேயராக இருந்த காரணத்தால் அந்தப் பதவிக்குரிய அதிகாரமும், கம்பீரமும் அவருக்கு தெரியும்.

Recommended Video

    மனஅழுத்தம்..! மாணவர்களின் விபரீத முடிவுகளை தடுக்க புதிய திட்டம்!
     துணை மேயர்

    துணை மேயர்

    விழா மேடையில் முதல்வருடன் மூன்று அமைச்சர்கள், மேயர், தலைமைச் செயலாளர் ஆகியோர் மட்டுமே அமர்ந்திருந்தனர். துணை மேயர் மகேஷ் உட்பட இன்னும் பல முக்கியப் பிரமுகர்கள் மேடைக்கு கீழே தான் அமர்ந்திருந்தனர். அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல் விரைவாக அந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு புறப்பட்டுவிட்டார் முதல்வர் ஸ்டாலின்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+