சூப்பர்.. சென்னையில் பிரபல டோல்கேட்டை மூடுறாங்களாமே.. திணறிய மக்கள்.. அரசு எடுக்க போகும் முடிவு?
சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் மெட்ரோ பணிகள் நடக்கும் நிலையில் முக்கியமான டோல்கேட் ஒன்றை மூட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசும் இது தொடர்பான பரிசீலனையில் ஈடுப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
சென்னை ஓஎம்ஆர் சாலையில் பல்வேறு டோல் கேட்டுகளில் சுங்கக்கட்டணம் நீக்கப்படுவதாக கடந்த 2021ல் அமைச்சர் ஏவ வேலு அறிவித்து இருந்தார். இது தொடர்பாக சட்டசபையில் பேசிய அவர், சில இடங்களில் ஒரு கோட்டம் முழுக்க சாலை பணிகளை ஒரே நிறுவனமே எடுத்து செய்கிறது. அதை மாற்ற உள்ளோம்.

ஒரு கோட்டத்தில் மொத்தமாக ஒரே நிறுவனம் சாலை டெண்டர் பணிகளை இனி எடுக்க முடியாது. பல்வேறு இடங்களில் சாலைகளை விரிவாக்கும் பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. சென்னையில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஓ.எம்.ஆர் சாலையில் 4 இடங்களில் சுங்க வசூல் நிறுத்தப்படுகிறது. மக்கள் அங்கு பயணம் செய்ய டோல் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை.
பெருங்குடி, துரைப்பாக்கம், கலைஞர் சாலை, மேடவாக்கம் சாலைகளில் இனி சுங்க கட்டணம் வசூலிக்கப்படாது. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் தொடங்க உள்ளன. இதை முன்னிட்டு இங்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டது. மக்களின் போக்குவரத்தை இது இனி எளிதாக்கும்.
இன்னும் பல டோல்களை அகற்றுவது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். சூரப்பட்டு, பரனூர், சென்னசமுத்திரம், நெமிலி, வானகரம், சுங்கச் சாவடியை அகற்ற மத்திய அரசிடம் வலியுறுத்த உள்ளோம். இது தொடர்பாக ஏற்கனவே மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு தமிழ்நாடு அரசு சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
நாவலூர்: சென்னையில் பல்வேறு இடங்களில் மெட்ரோ பணிகள் நடக்கும் நிலையில் தற்போது நாவலூர் டோல் கேட்டை தற்காலிகமாக மூட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசும் இது தொடர்பான பரிசீலனையில் ஈடுப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இங்கே மெட்ரோ பணிகள் நடக்கிறது.
இதன் காரணமாக மக்கள் சாலைகளில் பயணம் செய்ய முடியவில்லை. இந்த சாலையில் வாகனங்கள் மிக மிக மெதுவாக செல்ல வேண்டிய நிலை உள்ளது. வாகனங்கள் இங்கே ஊர்ந்து செல்லும் போதும் கூட இங்கே டோல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில்தான் நாவலூர் டோல் கேட்டை தற்காலிகமாக மூட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசும் இது தொடர்பான பரிசீலனையில் ஈடுப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
சென்னை மெட்ரோ பணிகள்: சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. சென்னை மெட்ரோ 2ம் கட்ட பணிகளுக்கான ஒப்பந்தங்கள் அடுத்தடுத்து கையெழுத்தாகி வருகின்றன. அடுத்தடுத்து 3 நிறுவனங்களுடன் இதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
அந்த வகையில் சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2-ல் மாதவரம் பணிமனையில் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையம் அமைப்பதற்காக யுஆர்சி கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் நிறுவனத்திற்கு ரூ. 65.80 கோடி மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பு கடிதம் யுஆர்சி கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் நிறுவனத்திற்கு 08.06.2023 அன்று வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications