'வாவ்' அறிவிப்பு.. பாஸ்போர்ட் பிரச்சினையா? இனி அப்பாயின்ட்மென்ட் இல்லாமலேயே அதிகாரியை சந்திக்கலாம்
சென்னை: புதிய பாஸ்போர்ட்டை பெறுவது, இருக்கும் பாஸ்போர்ட்டை புதுப்பிப்பது உள்ளிட்டவற்றில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், நேரடியாக சம்பந்தப்பட்ட அதிகாரியை சந்திக்கும் புதிய திட்டத்தை சென்னை பாஸ்போர்ட் அலுவலகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இவ்வாறு அதிகாரிகளை சந்திக்க எந்தவித அப்பாயின்ட்மெட்டையும், யாருடைய முன் அனுமதியையைும் பொதுமக்கள் பெற வேண்டியதில்லை என்பதுதான் இந்த திட்டத்தின் சிறப்பம்சம் ஆகும்.
'உங்கள் பாஸ்போர்ட் அதிகாரியை சந்திக்கவும்' என்ற பெயரிலான இந்த புதிய திட்டத்தால் பொதுமக்களின் அலைச்சல் குறைவதுடன், பாஸ்போர்ட் அலுவலர்களின் பணிச்சுமையும் குறையும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

'பாஸ்போர்ட்' அலைச்சல்
வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதுதான் பாஸ்போர்ட்டின் முக்கிய நோக்கம் என்றாலும், அதையும் தாண்டி முக்கிய அடையாள ஆவணமாகவும் அது பயன்படுவதை யாரும் மறுக்க முடியாது. ஒருகாலத்தில், பாஸ்போர்ட் வாங்குவது என்பது மிகவும் கடினமான காரியமாக இருந்தது. ஆனால், தற்போதைய ஆன்லைன் யுகத்தில் எளிதாகவே பாஸ்போர்ட் வாங்க முடிகிறது. ஆனால், பிறப்பு சான்றிதழில் இருக்கும் பெயர், தந்தை - தாய் பெயர் ஆகியவற்றில் சிறு முரண்பாடு இருந்தாலும் கூட அலைந்து திரிந்துதான் பாஸ்போர்ட்டை பெற வேண்டியுள்ளது.

புதிய திட்டம் அறிமுகம்
அதேபோல, பாஸ்போர்ட்டில் பெயரை மாற்றுவது, முகவரியை மாற்றுவது போன்ற திருத்தம் மேற்கொள்வதிலும் சில நடைமுறை சிக்கல்கள் நீடிக்கின்றன. மேலும், பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு நேரடியாக சென்றாலும் அங்கு கூட்டம் அதிகமாக இருப்பதால் 2, 3 நாட்கள் அலுவலகங்களுக்கு விடுமுறை எடுக்காமல் இந்த பிரச்சினையை நிவர்த்தி செய்வது முடியாத காரியமாக உள்ளது. மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் இந்த பிரச்சினையை கருத்தில்கொண்டு, வேற லெவல் திட்டத்தை சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது.

வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை..
'உங்கள் பாஸ்போர்ட் அதிகாரியை சந்திக்கவும்'(Meet your RPO) என்ற பெயரிலான இந்த திட்டத்தின் கீழ் சென்னை அண்ணாசாலை, எண். 158, ராயலா டவர்ஸ் என்ற முகவரியில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி கோவேந்தன் மற்றும் உயரதிகாரிகளை வாரம்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் நேரடியாக சந்தித்து குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

அப்பாயின்ட்மென்ட் தேவையில்லை
நண்பகல் 12 முதல் மதியம் 1 மணி வரை மேற்குறிப்பிட்ட அதிகாரிகளை பொதுமக்கள் சந்திக்கலாம். அதிகாரிகளை சந்திக்க எந்தவித அப்பாயின்ட்மென்ட்டையும் மக்கள் வாங்க தேவையில்லை. ஆனால், நேரில் செல்வதற்கு முன்பாக, பொதுமக்கள் 73053 30666 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு தங்கள் குறைகளை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கோவேந்தன் தெரிவித்துள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications