திடீரென அதிகரித்த தினசரி கொரோனா தொற்று.. மீண்டும் முதலிடம் சென்ற கோவை.. என்ன காரணம்?
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பில் சென்னை தொடர்ந்து முதலிடம் பிடித்து வந்த நிலையில் கோவை அதனை முந்தியுள்ளது. 125 பாதிப்புகளுடன் கோவை முதலிடத்தில் உள்ளது.

அதிரடியாக குறையும் கொரோனா
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது கொரோனா 800-க்குள் குறைந்து விட்டது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா மொத்த பாதிப்பு 27,19,515 உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஏற்ற, இறக்கமாக உயிரிழப்பு
கொரோனா உயிரிழப்பு தொடர்ந்து ஏற்ற, இறக்கமாக உள்ளது. சென்னையில் அதிகபட்சமாக கொரோனாவுக்கு 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல் செங்கல்பட்டிலும் 3 பேர் இறந்துள்ளனர். சேலத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 36,361 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 879 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 26,74,327 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

2-வது இடம் சென்ற சென்னை
8,827 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,00,705 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 5,23,27,681 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 118 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தினசரி பாதிப்பில் தொடர்ந்து முதலிடம் பிடித்து வந்த சென்னை இரண்டாவது இடம் சென்று விட்டது.

இரண்டு சதம்
கோவையில் திடீரென பாதிப்பு அதிகரித்துள்ளது. கோவை 125 பாதிப்புகளுடன் மீண்டும் முதலிடம் சென்றுள்ளது. செங்கல்பட்டில் 58 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 15 பேருக்கும், மதுரையில் 13 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 11 பேருக்கும், திருவள்ளூரில் 26 பேருக்கும், திருச்சியில் 29 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 48 பேருக்கும், ஈரோட்டில் 73 பேருக்கும், சேலத்தில் 41 பேருக்கும், நாமக்கல்லில் 39 பேருக்கும், தஞ்சாவூரில் 23 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையிலும், கோவையிலும் தினசரி பாதிப்பு தொடர்ந்து 100-ஐ கடந்து வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications