ரணகளமாகிப் போன சென்னை காங். தலைமை அலுவலகம்.. நிர்வாகிகள் கோஷ்டி மோதலால் போலீஸ் குவிப்பு
சென்னை: சென்னையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் கோஷ்டி மோதல் ஏற்பட்டு பலர் படுகாயமடைந்ததால் போலீசார் பெருமளவு குவிக்கப்பட்டனர்.
தமிழக காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல்களுக்கு பஞ்சம் இருந்ததே இல்லை. தமிழக காங்கிரஸ் கமிட்டியின் அத்தனை முன்னாள் தலைவர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் அனைவருமே ஒவ்வொரு கோஷ்டியை வளர்த்து வைத்துள்ளனர்.
இந்த கோஷ்டி பூசலால் தமிழகத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை எங்கு நடைபெற்றாலும் அமளி துமளி, அடிதடி இயல்பான ஒன்றாகிவிட்டது. அக்கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனும் எத்தனையோ ரணகள காட்சிகளை எதிர்கொண்டிருக்கிறது.

குடும்பிடி சண்டை- அடிதடி
காங்கிரஸ் நிர்வாகிகள் அறிவிப்பு, வேட்பாளர்கள் அறிவிப்பு, பொறுப்பாளர்கள் அறிவிப்பு என ஏதேனும் ஒன்று நிகழ்ந்தாலும் போதும்.. சென்னை சத்தியமூர்த்தி பவனில் உச்சகட்ட அடிதடி நடப்பது வழக்கம். 5 ஆண்டுகளுக்கு மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் குடுமிபிடி சண்டை போட்டு புரண்டு எழுந்த நிகழ்வுகளையும் பார்த்திருக்கிறது சத்தியமூர்த்தி பவன்.

சத்தியமூர்த்தி பவனில் கிழியாத வேஷ்டி சட்டையா?
சண்டையில் கிழியாத வேஷ்டி சட்டையா? என்ற சொலவடை மாறிப் போய் சத்தியமூர்த்தி பவனில் கிழியாத வேஷ்டி சட்டையா என்ற ரேஞ்சுக்கு பில்டப்பாகி வரலாற்றில் இடம் பிடித்துவிட்டது. ஒவ்வொரு காங்கிரஸ் தலைவரின் கோஷ்டியும் இன்னொரு தலைவரின் கோஷ்டியை பரம வைரியாகத்தான் பார்ப்பது வழக்கம். இத்தகைய அமளி துமளி, வேஷ்டி சட்டை கிழிப்பை எந்த ஒரு காங்கிரஸ் மேலிடத்தாலும் தடுக்க முடியாமல் போனது.

மீண்டும் அடிதடி
இதன் தொடர்ச்சியாக சத்தியமூர்த்தி பவனில் இன்று மீண்டும் மோதல் நடைபெற்றது. நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரியை எதிர்கோஷ்டியினர் முற்றுகையிட்டனர். இம்முற்றுகையானது பெரும் மோதலானது.

ரத்த காயங்கள்
இதனைத் தொடர்ந்து நெல்லை ஜெயக்குமார் கோஷ்டியும் அவரது எதிர்கோஷ்டியும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதனால் சத்தியமூர்த்தி பவன் ரணகளமாகிப் போனது. பலரது மூக்குகள் உடைந்து ரத்தம் சிந்திய நிலையில் அங்கும் இங்குமாக ஓடினர். இதனைத் தொடர்ந்து சத்தியமூர்த்தி பவனுக்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர். தற்போது அங்கு அமைதி திரும்பினாலும் பெருமளவு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications