5 ஸ்டார் ஹோட்டல் அதிபர்களுக்கும் கடன் இருக்கிறது... விவரிக்கும் லீ மெரிடியன் அதிபர் ஜி.பெரியசாமி
சென்னை: கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் லாக்டவுனில் உள்ளதால் தொழில்துறை கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறது.
அந்த வகையில் ஹோட்டல் தொழில் துறைக்கு கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகள் என்ன என்பது பற்றி அறிவதற்காக லீ மெரீடியன் 5 நட்சத்திர விடுதி அதிபர் பழனி ஜி.பெரியசாமியிடம் பேசினோம்.

அப்போது அவர் அளித்த தகவலின் விவரம் பின்வருமாறு;
''கொரோனா வைரஸ் தாக்கத்தால் யாருக்கு பாதிப்பு ஏற்பட்டதோ இல்லையோ, ஆனால் ஹோட்டல் மற்றும் சுற்றுலா துறைக்கு மிக பலத்த அடி விழுந்துள்ளது. வரலாறு காணாத அளவில் இந்த ஹோட்டல் தொழில் தற்போது சரிவை கண்டுள்ளது. இந்தியா முழுவதும் 2.5 கோடி பேர் ஹோட்டல்களை நம்பி நேரடியாகவும், 6.5 கோடி பேர் மறைமுகமாகவும் ஹோட்டல்களை சார்ந்து வருவாய் ஈட்டி வருகின்றனர். மொத்தம் 9 கோடி பேர் என வைத்துக்கொள்ளுங்கள். இவர்கள் அனைவரின் நிலையை நினைத்தால் கவலையாக உள்ளது.
தற்போது லாக்டவுன் உள்ளதால் சென்னை உட்பட எந்த நகரத்திலும் 5 நட்சத்திர விடுதிகள் முழுமையாக செயல்படவில்லை. புதிதாக ரிசர்வேஷன்கள் கிடையாது, ரெஸ்டாரெண்ட்கள் செயல்படுவதில்லை. ஏற்கனவே ஒப்பந்தம் செய்து தங்கியிருக்க கூடிய நான்கு அல்லது ஐந்து அறைகளுக்காக ஒரு 50 ஊழியர்களை மட்டும் கொண்டு எங்கள் லீ மெரீடியன் நட்சத்திர விடுதியில் பணி அமர்த்தியுள்ளோம். மற்றபடி மற்ற அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுவிட்டன.

கொரோனாவால் ஏற்பட்டிருக்கக் கூடிய பாதிப்பை பற்றி சொல்ல வேண்டும் என்றால் இது ஒரு ஹை வோல்ட் ஷாக் என்று கூறலாம். அந்தளவிற்கு சரிவு ஏற்பட்டுள்ளது. 5 நட்சத்திர விடுதி நடத்துபவர்களுக்கும் வங்கிகளில் கடன் இருக்கிறது. இதனால் வங்கி கடன் தவணையை செலுத்த 6 மாத காலம் அவகாசம் கொடுத்தால் உதவியாக இருக்கும். இதேபோல் லாக்டவுன் முடிந்தபின்னர் குறைந்தது 3 மாதகாலத்திற்கு ஹோட்டல் நிறுவனங்களிடம் இருந்து வரி வசூலிக்கக் கூடாது என்பது எனது கோரிக்கை. அரசு வரிச்சலுகை தர வேண்டும்.
இப்போது ஏற்பட்டிருக்கக் கூடிய பாதிப்பில் இருந்து மீண்டு வர குறைந்தது 6 முதல் 7 மாதங்கள் ஆகக்கூடும். அதன் பின்னரே இயல்பு நிலைக்கு ஹோட்டல் துறை வரும். அதுவரை கடும் நெருக்கடிகளையும், பொருளாதார பிரச்சனைகளையும் சந்தித்து ஆகவேண்டும். அனைத்தையும் சந்தித்துதான் இந்த ஹோட்டல்களை இயக்க வேண்டும்.
நான் இந்த நேரத்தில் 3 கோரிக்கைகளை முன்வைக்கிறேன். வங்கி கடன் தவணை செலுத்த 6 மாதகாலம் அவகாசம், வரிச்சலுகை, மேலை நாடுகளை போல் ஹோட்டல் தொழிலுக்கு மானியம். இதை மூன்றையும் அரசு செய்துகொடுத்தால் உதவிகரமாக இருக்கும்''
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications