பல்லிளித்த ரேபிட் டெஸ்ட் கிட்டுகள்.. தமிழகத்திலும் சோதனைகள் நிறுத்தம்.. சுகாதாரத்துறை அறிவிப்பு
ரேபிட் கிட் டெஸ்ட் நிறுத்தம் என தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது
சென்னை: தமிழகத்திலும் இன்று முதல் ரேபிட் கருவி டெஸ்ட்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ரேபிட் கருவி பரிசோதனை முடிவுகள் தவறாக காட்டுவதால் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்தபடியே வருகிறது.. இன்றைய தேதிக்கு கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மட்டும் 1596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. இதற்கு இன்னமும் மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை.. அதே சமயம் ஒருவருக்கு தொற்று இருக்கிறதா, உடலில் எவ்வளவு எதிர்ப்பு சக்திகள் உள்ளன என்பதை துல்லியமாக கண்டுபிடிக்கும் டெஸ்ட் கருவிகளும் நம்மிடம் இல்லை.
அதனால்தான், எதிர்ப்புச் சக்தி உள்ளதா என்பதை வெறும் அரை மணி நேரத்தில் கண்டுபிடித்து தெரிவிக்கும் நவீன ரேபிட் டெஸ்டிங் கிட்-களை சீனாவிடம் இருந்து இந்தியா வாங்கியது. 3 லட்சம் கருவிகள் 2 தினங்களுக்கு முன்பு தருவிக்கப்பட்டன.. அவைகள் மாநிலங்களுக்கு பிரித்தனுப்பும் பணி நடந்து, அதன்படி டெஸ்ட்களும் துரிதமாயின. தமிழகத்துக்கும் 24 ஆயிரம் ரேபிட் டெஸ்டிங் கருவிகளும், மத்திய அரசிடம் இருந்து 12 ஆயிரம் கருவிகளும் வந்திருந்தன. அதனால் 2 தினங்களாக டெஸ்ட்டுகளும் வேகமாக நடந்து வந்தன.
ஆனால் ராஜஸ்தானில் மக்களுக்கு இதை வைத்து டெஸ்ட் செய்யும்போது தவறான முடிவுகள் வந்துள்ளதாக நேற்றைய தினம் கூறி ராஜஸ்தானில் ரேபிட் டெஸ்டிங் நிறுத்தப்பட்டது. இதற்கு பிறகுதான், ரேபிட் டெஸ்டிங் முறையை பயன்படுத்துவதை நிறுத்தி வைக்குமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி இருந்தது. இதையடுத்து உடனடியாக மகாராஷ்டிரா, மேற்குவங்கம், குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், கர்நாடகா, அசாம், அரியானா மாநிலங்களில் இந்த ரேபிட் டெஸ்டிங் நிறுத்தப்பட்டது.

இதை தொடர்ந்து தமிழகத்திலும் இந்த பரிசோதனை நிறுத்தப்பட்டது.. இதனை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது... ரேபிட் கருவி பரிசோதனை முடிவுகள் தவறாக காட்டுவதால் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.. 34000 ரேபிட் கருவிகள் தமிழகத்தில் கைவசம் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Recommended Video
தற்போது நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு எண்ணிக்கை கூடி வரும் நிலையில், டெஸ்ட்டுகளும் நிறுத்தப்பட்டுள்ளது மக்களுக்கு கலக்கத்தை தந்து வருகிறது. எனினும் தமிழக அரசு தொற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவான டெஸ்ட்களை எடுக்கும் பணியை பல்வேறு வகைகளில் துரிதப்படுத்தி வருகிறது!!
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications