"டேஞ்சர்".. 3 முறை உருமாறிய "பெங்கால் வைரஸ்".. பீதியை கிளப்பும் கொரோனா 2வது அலை..!
கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவல் மிக ஆபத்தாக இருந்து வருகிறது
சென்னை: மும்முறை உருமாறிய "பெங்கால் வைரஸ்" மிகவும் ஆபத்தானது என நிபுணர்கள் வார்னிங் தந்துள்ளனர்.. அதேசமயம், இந்த வைரஸில் சில சிக்கல்கள் இருப்பதும் அறிவியலாளர்களை கவலை கொள்ள வைத்துள்ளது.
Recommended Video
டெல்லியில் உள்ள சிஎஸ்ஐஆர் உயிரியல் ஆய்வு மையம் பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகிறது.. இருமுறை உருமாற்றம் அடைந்த இந்திய வகை கொரோனா வைரஸை சமீபத்தில் கண்டுபிடித்தது கூட இந்த ஆய்வு மையம்தான்.. மகாராஷ்டிராவில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் இருந்து இந்த 2 முறை உருத்திரிபு வகை கண்டறியப்பட்டது.
அந்த வகையில் இப்போதும் ஒரு புதிய ஆய்வில் ஈடுபட்டு வருகிறது.. அதாவது, வெளிநாட்டு பயணிகள் மூலமாக புதிய வகை கொரோனா வைரஸ் பரவுகிறதா? என்று கண்ணிக்கிறது.. மேலும் அது குறித்த ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறது.. அதன்படி, மேற்கு வங்கத்தில் பரவி வரும் கொரோனாவைரஸ், 3 முறை உருத்திரிவு அடைந்துள்ளதாம்.. இதனை "பெங்கால் வைரஸ்" என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்..

எதிர்ப்பு சக்தி
இந்த வகை கொரோனா வைரஸ், மிக ஆபத்தானாம்.. நிறைய தொற்றுத்தன்மை வாய்ந்ததாம்.. இது எந்த அளவுக்கு ஆபத்து என்றால், தடுப்பூசி போட்டதால் உருவான நோய் எதிர்ப்பு சக்தியை மீறி பரவும் திறன் கொண்டது என்கிறார்கள்.. அதாவது, ஏற்கெனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களும் கூட இதில் இருந்து தப்ப முடியாது என்கின்றனர். ஒரு நபரின் நோய் எதிர்ப்பு சக்தி கண்காணிப்பில் இருந்தும் இந்த வைரஸ் தப்பிவிடுகிறதாம்.. இதை நினைத்துதான் அறிவியலாளர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்..

மாநில அரசு
இது சம்பந்தமான அடுத்த ஆய்வுகள் இன்னும் வரவில்லை.. அதேசமயம், இதை உறுதிப்படுத்தவோ, மறுக்கவோ வேறு ஆய்வுகள் எதுவும் செய்யப்படவுமில்லை.. கடந்த சில மாதமாகவே மேற்கு வங்கத்தில் இந்த வகை வைரஸ் பரவல் அதிகரித்து வந்துள்ளது.. இது அந்த மாநில அரசுக்கு புது தலைவலியையும் ஏற்படுத்தி வருகிறது.

கூடுதல் ஆய்வு
இந்த பெங்கால் வைரஸ், உடம்பில் ஏற்கனவே உருவாகி இருக்கும் நோய் எதிர்ப்பு முறைக்கு தப்பிவிடும் திறன்கொண்ட, பிரேசில், தென்னாப்பிரிக்கா வகை உருத்திரிபு வைரஸ்களின் பண்புகளை கொண்டிருக்கலாம் என்றும் அறிஞர்கள் கருதுகிறார்கள்.. அதனால் இது சம்பந்தமான கூடுதல் ஆய்வுகளை மேற்கொண்டால் மட்டுமே ஒரு தெளிவு வரும், என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்..

புது தலைவலி
ஏற்கனவே 2வது அலை மிக மோசமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தனர்.. அதன்படியே ஏராளமானோர் தற்போதும் பாதிக்கப்பட்டும் வருகின்றனர்... நாடு முழுவதும் ஆஸ்பத்திரிகளே நிரம்பி வழிகிறது.. ஒருபக்கம் தடுப்பூசிகளுக்கும் பற்றாக்குறை.. இன்னொரு பக்கம் ஆக்ஸிஜனுக்கும் பற்றாக்குறை. உள்ளது.. இந்த மாதிரி படுமோசமான சூழலில், மும்முறை உருமாறிய இந்த பெங்கால் வைரஸ் புது அச்சத்தை கிளப்பி கொண்டு வருகிறது.
-
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35 -
இந்தியர்கள் இருந்த படகை குறிவைத்து தாக்குதல்.. நடுக்கடலில் தத்தளித்த 24 பேர்.. திக்திக் சம்பவம் -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
அந்த 3 கேள்விகள்! பதில் சொல்ல கூட முடியாமல் திணறல்! Starlink சேவையை இந்தியாவில் தொடங்குவதில் சிக்கல் -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
இந்தியா கூட்டணியில் மிஸ்ஸான விஜய் கட்சி.. காங்கிரஸ் ஒன்னு சொல்ல.. திருமா வேற சொல்ல..! பெரிய குழப்பம் -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி












Click it and Unblock the Notifications