Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை.. வரப்போகும் கூடுதல் கட்டுப்பாடுகள்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டவது அலை அதிவேகமாக குறைந்து வந்தது. இதனால் அரசும், மக்களும் நிம்மதியாக இருந்த நிலையில் ஓமிக்ரான் வைரஸ் புகுந்த நேரத்தில் இருந்து தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

கடந்த மாத தொடக்கத்தில் பாதிப்பு 700-க்குள் இருந்த நிலையில் தற்போது தினசரி பாதிப்பு 10,000-ஐ கடந்து விட்டது. ஓமிக்ரான் வைரசும் உச்சத்தில் சென்று விட்டது. சென்னையில் தினம்தோறும் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகி வருகிறது.

ஜனவரி 10ம் தேதி வரை இருக்கும் கட்டுப்பாடுகள்

ஜனவரி 10ம் தேதி வரை இருக்கும் கட்டுப்பாடுகள்

செங்கல்பட்டு, கோவை., திருவள்ளூர் மற்றும் திருப்பூர், திருவள்ளூர், தூத்துடிக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பாதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது நிலைமை இப்படி இருக்க தமிழகத்தில் ஏற்கனவே ஜனவரி 10ம் தேதி வரை ஊரடங்கை நீடித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார். இத்துடன் சேர்த்து பல்வேறு கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டன. அனைத்து பள்ளிகளிலும், வருகிற 10-ம் தேதி வரை 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டது.

இரவு நேர ஊரடங்கு

இரவு நேர ஊரடங்கு

மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் மெட்ரோ ரயில்களில் 50% பேர் மட்டுமே பயணம் செய்ய அனுமதி, ஜிம்கள், ஹோட்டல்கள், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் ஆகியவற்றில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி என்ற பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இது தவிர தற்போது தினமும் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைதோறும் முழு ஊரடங்கும் தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.

முதல்வர் நாளை ஆலோசனை

முதல்வர் நாளை ஆலோசனை

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிவேமாக உயரும் நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்துக்கு பிறகு முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது தமிழகத்தின் முக்கிய பண்டிகையான பொங்கல் நெருங்கி வரும் நிலையில் மேலும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Recommended Video

    Chennai Saravana Stores-ஐ மூட திடீர் உத்தரவு !| Covid Hotspot | Oneindia Tamil
    வரப்போகும் கூடுதல் கட்டுப்பாடுகள்?

    வரப்போகும் கூடுதல் கட்டுப்பாடுகள்?

    தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு போடப்பட்டுள்ள நிலையில் கொரோனாவை அதிரடியாக கட்டுப்படுத்த தினமும் முழு லாக்டவுன் போட வாய்ப்பு உளளதாக தகவல்கள் பரவுகின்றன. இப்படி முழு லாக்டவுன் போடாவிட்டாலும் பெரிய கடைகள், தியேட்டர்கள் என மக்கள் அதிமாக திரளும் இடங்கள் மூடப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது மாநிலங்களுக்கு இடையே பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் இந்த பேருந்துகளை நிறுத்த வாய்ப்புள்ளது என்றும் தமிழகத்திலும் மாவட்டங்களுக்கு உள்ளே மட்டும் பேருந்துகள் இயக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன. மேலும், 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கவும் தடை நீட்டிக்கப்படலாம் என்றும் தெரிகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+