புயல் சென்னையில் கரையை கடக்காது.. பயப்பட வேண்டாம்! அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் விளக்கம்
சென்னை: டிட்வா புயல் காரணமாக சென்னையில் கனமழை தொடங்கியிருக்கிறது. இந்நிலையில், புயல் சென்னையில் கரையை கடக்காது என்றும், எனவே பயப்பட தேவையில்லை எனவும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் விளக்கமளித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, "இந்த புயல் சென்னையில் கரையை கடக்காது. சென்னையை ஒட்டி வந்து, ஆந்திரா பக்கம் நெல்லூர் பக்கம் சென்று கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

இருப்பினும் சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்யும். நாளை கனமழையாக கூட பெய்யலாம். எனவே பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக வெளியே வர வேண்டாம். புயலால் பெரிய அளவுக்கு பாதிப்பு இருக்காது. புயல் அறிவிப்பு வந்த உடனேயே முதலமைச்சர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருக்கிறார்.
இந்த புயலால் ஒரு உயிரிழப்பு கூட இருக்க கூடாது. அந்த வகையில் பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications