தமிழகத்தில் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த 13 பேர் கைது.. சிறுவர்கள் உட்பட 78 பேர் மீது வழக்கு!
சென்னை: தமிழகத்தில் தீபாவளி அன்று கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 13 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். 78 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்த முறை தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் நிறைய விதிகளை அறிமுகப்படுத்தி உள்ளது. காற்று மாசு காரணமாக உச்ச நீதிமன்றம் நிறைய விதிகளை அறிமுகப்படுத்தி உள்ளது.

தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரை பட்டாசு வெடிக்கலாம். இரவு 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்கலாம்.
[எங்கெங்கும் டப் டப்... பட்டாசு வெடி வெடிக்க.. கோலாகல தீபாவளி]
மேலும் அதிக சத்தம் எழுப்பும், அதிக மாசுக்களை உருவாக்கும், குப்பைகளை உருவாக்கும் பட்டாசுகளை தவிர்க்குமாறு மக்களுக்கு தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. இந்த நிலையில் இந்த கட்டுப்பாட்டை மதிக்காத நபர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது.
நெல்லையில் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக மொத்தம் 6 பெரியவர்கள் மற்றும் 7 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் வெடி பொருட்கள் வைத்திருந்தது உள்பட 3 பிரிவுகளின் கீழ் 6 பேர் மீது சேரன்மகாதேவி போலீசார் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அங்கு சிறுவர்களிடம் சிறுவர்களிடம் இருந்த பட்டாசுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்த சிறுவர்கள் உட்பட ஏராளமானோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருப்பூரில் 42, கோவையில் 30 மற்றும் நெல்லையில் 13 என்று மொத்தம் தமிழகம் முழுக்க சிறுவர்கள் உட்பட 78 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications