பள்ளிவாசல்களில் நோன்புக் கஞ்சி தயாரிக்க அனுமதி மறுப்பு... வீடுகளுக்கு பச்சரிசியை விநியோகிக்க முடிவு
சென்னை: கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பள்ளிவாசல்களில் நோன்புக் கஞ்சி தயாரிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதில் நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கான அரிசியை பள்ளிவாசல் நிர்வாகங்கள் மூலம் வீடுகளுக்கே விநியோகம் செய்ய அரசு தலைமை காஜியுடன் தலைமைச் செயலாளர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் தமிழகத்தில் வரும் 25-ம் தேதி முதல் கடைபிடிக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தின் போது பள்ளிவாசல்களில் சிறப்பு இரவு நேர தொழுகை(தராவிஹ்) நடத்தப்படுவது வழக்கம். மேலும், நோன்புக் கஞ்சி தயாரித்து நோன்பாளிகளுக்கு அந்த கஞ்சி வழங்கப்படும். இதனிடையே கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த நடைமுறையில் இந்தாண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு பதில் அதற்கான அரிசியை பள்ளிவாசல் நிர்வாகங்கள் மூலம் வீடுகளுக்கு கொடுக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
வரும் 19-ம் தேதிக்குள் அனைத்து பள்ளிவாசல்களுக்கும் பச்சரிசி வழங்கப்படும் என்றும், அதனை 23-ம் தேதிக்குள் இஸ்லாமிய பெருமக்களுக்கு விநியோகிக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், இப்தார், இரவு நேர சிறப்பு தொழுகை உள்ளிட்ட வணக்க வழிபாடுகளை அவரவர் வீடுகளிலேயே மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே இது போன்ற விவகாரங்கள் முடிவெடுக்கும் போது இஸ்லாமிய கட்சிகள் அமைப்புகளின் தலைவர்களை அழைத்து தான் தலைமைச் செயலாளர் ஆலோசித்து முடிவை அறிவிப்பார். ஆனால் இன்று தமிழ்நாடு அரசு தலைமை காஜியை அழைத்து அவருடன் மட்டும் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications