பிறந்தது 2023.. 'நல்லதே நடக்கனும்'.. அதிகாலையில் கோவில்களில் குவிந்த பக்தர்கள்.. அலைமோதும் கூட்டம்!
சென்னை: ஆங்கில புத்தாண்டை ஒட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நள்ளிரவு நடைபெற்றது. அதேபோல், முக்கிய கோவில்களிலும் அதிகாலையில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆங்கிலப் புத்தாண்டு தினம் உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. 2022-ம் ஆண்டு விடைபெற்று 2023-ம் ஆண்டு அடியெடுத்து வைத்துள்ளது.
புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடி வரவேற்றனர். புத்தாண்டு தினத்தை ஒட்டி இன்று அதிகாலை கோவில்களில் சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவில் சிறப்பு பிராத்தனை நடைபெற்றது. புத்தாண்டு தினத்தில் இந்த ஆண்டு முழுவதும் சுபிட்சமாக அமைய வேண்டும் என்ற எண்ணத்த்துடன் கோவில்களிலும் மக்கள் தரிசனத்திற்கு குவிவதுண்டு. அந்த வகையில் இன்று தமிழகத்தின் பிரசித்தி பெற்ற பல கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் இன்று அதிகாலை பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

சென்னையில் உள்ள கோவில்களில்
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோவில், திருவெற்றியூர் வடிவுடையம்மன் ஆலயம், பாரிமுனையில் உள்ள காளிகாம்பால் கோவில் உள்ளிட்ட பல முக்கிய கோவில்களிலும் புத்தாண்டையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்ட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள 100 க்கும் மேற்பட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

சிறப்பு பூஜைகள்
பக்தர்கள் அதிகாலையில் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தனர். இதனால் கோவில்களில் கூட்டம் அலைமோதியது. புத்தாண்டை ஒட்டி அனைத்து முக்கிய கோவில்களிலும் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்ந்தது. பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. அதேபோல், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் புத்தாண்டை ஒட்டி அதிகாலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். கோவிலில் அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் வரிசையாக நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். புத்தாண்டை முன்னிட்டு மீனாட்சி அம்மனுக்கும் சுந்தரேஸ்வர்ர் சுவாமிக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது.

போலீசார் பாதுகாப்பு பணி
பிள்ளையர்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கபப்ட்ட நிலையில் 8 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. திண்டுக்கல் எஸ்.பி பாஸ்கரன் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட போலீசார் பதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications