கைலாசாவில் கலாசலா! காலாவதி பாஸ்போர்ட்.. நித்யானந்தாவுடன் ஐக்கியமான மீரா மிதுன்? அவரே சொல்லிருக்கார்!
சென்னை : பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் தலைமறைவாக இருக்கும் நடிகை மீரா மிதுனின் பாஸ்போர்ட் காலாவதியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அவர் வெளிநாடு தப்பிச்செல்ல வாய்ப்பில்லை என்றும், ஒருவேளை நித்தியானந்தாவின் கைலாசா நாட்டில் தஞ்சம் அடைந்து இருக்கலாம் என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை மீரா மிதுன் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் குறித்து அவதூறாக பேசினார். இதன் காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடிகை மீரா மிதுன் மற்றும் அவருடைய நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அந்த புகாரின் படி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சில நாட்கள் விசாரணைக்குப் பிறகு இருவரும் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். இதனால் அவருக்கு நெகட்டிவ் பப்ளிசிட்டி கிடைத்தது.

மீரா மிதுன்
அதன் பிறகு மீரா மிதுன் மற்றும் சாம் அபிஷேக் ஆகியோர் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், விசாரணைக்கு மீரா மிதுன் ஆஜராகாததால் அவர் மீது பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் மீரா மிதுன் தலைமறைவாகிவிட்டார். கடந்த மாதம் 19-ம் தேதி கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது மீரா மிதுனை தொடர்ந்து தேடி வருவதாகவும் அவருடைய குடும்பத்தை கண்காணித்து வருவதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

தலைமறைவு
ஆனால் தொடர்ந்து மீரா மிதுன் தலைமறைவாக இருப்பதால் அவரை போலீசால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளனர். அதாவது லுக் அவுட் நோட்டீஸ் அனுப்புவதற்கு காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். மேலும் இதன் மூலம் தலைமறைவாக இருக்கும் மீரா மிதுன் கூடிய விரைவில் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாஸ்போர்ட் காலாவதி
இந்நிலையில் தான் நடிகை மீரா மிதுனின் பாஸ்போர்ட் காலாவதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அவர் விமான நிலையங்களில் இருந்து வெளி நாட்டிற்கு தப்பிச் செல்ல முடியாது. அதே நேரத்தில் அவர் தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட ஏதாவது ஒரு அண்டை மாநிலத்தில் தான் இருப்பார் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

கைலாசாவில் இருப்பாரோ?
பல பல பெரும் புள்ளிகளையே அலற விட்ட காவல்துறைக்கு மீரா மிதுன் ஒரு பொருட்டே இல்லை என்றாலும், அவரை கைது செய்ய நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மீரா மிதுன் நித்யானந்தாவின் கைலாசாவுக்கு சென்றிருக்கலாம் என கிண்டல் செய்து வருகின்றனர். காரணம் கடந்த சில வருடங்களுக்கு முன் நான் கைலாசாவுக்கு சீக்கிரம் செல்வேன் என மீரா மிதுன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். அதனை வைத்து தற்போது அங்கே போயிருப்பார் விசாரிங்க என மீம்ஸ்களை பறக்க விட்டு வருகின்றனர்.
-
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக் -
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
"ஸ்டாக் இல்லை" சென்னை கடைகளில் மளமளவென காலியாகும் இண்டக்ஷன் ஸ்டவ்-கள்! நேரடி கள ரிப்போர்ட்! -
சென்னையில் மூடப்பட்ட பங்குகள்.. பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு! இப்படியே போனா கஷ்டம் -
சென்னையில் திருச்சி மாணவி பாலியல் வன்கொடுமை புகார் பொய்யானது! அபிராமபுரம் போலீஸ் விளக்கம் -
கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும்.. தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை.. என்னாச்சு? -
பயப்பட வேண்டாம்.. தமிழ்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடே இல்லை.. பங்க் உரிமையாளர்கள் விளக்கம்! -
வீட்டில் இருக்குற தண்ணி டேங்க் மட்டும் தான் கழட்டிட்டு வரல.. திரும்பி பார்க்க வைத்த சென்னைவாசி -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம் -
சென்னையின் இருதயத்தில் நடக்கும்.. பைபாஸ் சர்ஜரி.. 100 கி.மீ சாலைகள் விரிவாக்கம்.. அடியோடு மாறுது!












Click it and Unblock the Notifications