கைலாசாவில் கலாசலா! காலாவதி பாஸ்போர்ட்.. நித்யானந்தாவுடன் ஐக்கியமான மீரா மிதுன்? அவரே சொல்லிருக்கார்!
சென்னை : பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் தலைமறைவாக இருக்கும் நடிகை மீரா மிதுனின் பாஸ்போர்ட் காலாவதியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அவர் வெளிநாடு தப்பிச்செல்ல வாய்ப்பில்லை என்றும், ஒருவேளை நித்தியானந்தாவின் கைலாசா நாட்டில் தஞ்சம் அடைந்து இருக்கலாம் என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை மீரா மிதுன் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் குறித்து அவதூறாக பேசினார். இதன் காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடிகை மீரா மிதுன் மற்றும் அவருடைய நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அந்த புகாரின் படி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சில நாட்கள் விசாரணைக்குப் பிறகு இருவரும் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். இதனால் அவருக்கு நெகட்டிவ் பப்ளிசிட்டி கிடைத்தது.

மீரா மிதுன்
அதன் பிறகு மீரா மிதுன் மற்றும் சாம் அபிஷேக் ஆகியோர் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், விசாரணைக்கு மீரா மிதுன் ஆஜராகாததால் அவர் மீது பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் மீரா மிதுன் தலைமறைவாகிவிட்டார். கடந்த மாதம் 19-ம் தேதி கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது மீரா மிதுனை தொடர்ந்து தேடி வருவதாகவும் அவருடைய குடும்பத்தை கண்காணித்து வருவதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

தலைமறைவு
ஆனால் தொடர்ந்து மீரா மிதுன் தலைமறைவாக இருப்பதால் அவரை போலீசால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளனர். அதாவது லுக் அவுட் நோட்டீஸ் அனுப்புவதற்கு காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். மேலும் இதன் மூலம் தலைமறைவாக இருக்கும் மீரா மிதுன் கூடிய விரைவில் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாஸ்போர்ட் காலாவதி
இந்நிலையில் தான் நடிகை மீரா மிதுனின் பாஸ்போர்ட் காலாவதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அவர் விமான நிலையங்களில் இருந்து வெளி நாட்டிற்கு தப்பிச் செல்ல முடியாது. அதே நேரத்தில் அவர் தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட ஏதாவது ஒரு அண்டை மாநிலத்தில் தான் இருப்பார் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

கைலாசாவில் இருப்பாரோ?
பல பல பெரும் புள்ளிகளையே அலற விட்ட காவல்துறைக்கு மீரா மிதுன் ஒரு பொருட்டே இல்லை என்றாலும், அவரை கைது செய்ய நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மீரா மிதுன் நித்யானந்தாவின் கைலாசாவுக்கு சென்றிருக்கலாம் என கிண்டல் செய்து வருகின்றனர். காரணம் கடந்த சில வருடங்களுக்கு முன் நான் கைலாசாவுக்கு சீக்கிரம் செல்வேன் என மீரா மிதுன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். அதனை வைத்து தற்போது அங்கே போயிருப்பார் விசாரிங்க என மீம்ஸ்களை பறக்க விட்டு வருகின்றனர்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்!












Click it and Unblock the Notifications