தேமுதிக அலுவலகத்தில் கையெடுத்து கும்பிட்ட விஜயகாந்த்.. உற்சாகத்தை வெளிப்படுத்திய தொண்டர்கள்!
சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேசியக் கொடி ஏற்றி வைத்து தொண்டர்களை சந்தித்துள்ளார்.
Recommended Video
நாடு முழுவதும் 76ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடியும், தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் கொடியேற்றி உரையாற்றினர். இதனைத்தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் ஆட்சியர்கள் தேசியக் கொடியேற்றி வருகின்றனர். அதேபோல் பல்வேறு கட்சியினரும் அவர்களது கட்சி அலுவலகங்களில் தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர்.

விஜயகாந்த் உடல்நிலை
இந்த நிலையில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் தேசிய கொடியை ஏற்றி உள்ளார். உடல் நிலை சரியில்லாமல் அவதியுற்று வரும் விஜயகாந்த், சில ஆண்டுகளாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார்.

புகைப்படங்கள்
இதனால் அவரது கட்சி நடவடிக்கைகளை அவரது குடும்பத்தினரே மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில்கூட அவர் போட்டியிடவில்லை. அவரது பெயர்களில் அறிக்கைகளும், அவ்வப்போது குடும்பத்தினருடன் விஜயகாந்த் இருக்கும் புகைப்படங்கள் மட்டுமே வெளியிடப்படும்.

விரல் அகற்றம்
அதுமட்டுமல்லாமல் சில நாட்களுக்கு முன் நீரழிவு பிரச்சனையால் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி விரல் அகற்றப்பட்டது. இதனிடையே உடல்நிலை நலிந்த நிலையில், சமூக வலைதளங்களில் வெளியாகிய புகைப்படம் திரையுலகினர் உட்பட அனைவரையும் கலங்க செய்தது.

உற்சாகத்தில் தொண்டர்கள்
இந்த நிலையில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று காலை அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் தேசிய கொடியை ஏற்றினார். நீண்ட நாட்களுக்கு பின் வெளியே வந்த விஜயகாந்தை பார்க்க அவரது கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள், ரசிகர்கள் அனைவரும் பெருமளவில் திரண்டனர். விஜயகாந்தை பார்த்த உற்சாகத்தில் தொண்டர்கள் ஆரவாரம் செய்து உற்சாகத்தை வெளிப்படுத்த, அவர்களின் ஆரவாரத்தை ஏற்றுக்கொள்ளும் வகையில் விஜயகாந்த் கையெடுத்து குடும்பிட்டு, வெற்றிக் குறியை காட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications