காங்கிரஸ் தலைவர் தேர்தல் பற்றி.. திமுக கே.எஸ் ராதாகிருஷ்ணன் அட்டாக்.. அதிரடியாக நீக்கிய துரைமுருகன்
சென்னை: திமுக செய்திதொடர்பாளர் கே எஸ் ராதாகிருஷ்ணன் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இந்த தலைவர் தேர்தலில் சசி தரூர் மற்றும் மல்லிகார்ஜுனா கார்கே ஆகியோர் போட்டியிட்டனர்.
காங்கிரஸ் தலைவர் பதவியில் போட்டியிட ராகுல் காந்தி விரும்பவில்லை. அதேபோல் காங்கிரஸ் இடைக்கால தலைவர் பதவியில் நீடிக்க சோனியா காந்தியும் விரும்பவில்லை.

நேரு குடும்பம்
இதையடுத்து நேரு குடும்பத்தை சேராத ஒருவர் இந்த முறை தலைவராகும் வாய்ப்பு ஏற்பட்டது. சசி தரூர், மல்லிகார்ஜுனா கார்கே ஆகியோர் போட்டியிட்டனர். இதில் மல்லிகார்ஜுனா கார்கேவிற்கு சோனியா காந்தி மற்றும் அவரது ஆதரவாளர்களின் ஆதரவு இருப்பதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. அதாவது கார்கே வெற்றிபெற்றால் அவர் சோனியா - ராகுல் ஆகியோரின் ரிமோட் கன்ட்ரோல் பொம்மை போல செயல்படுவார். அவர் சுதந்திரமாக முடிவுகளை எடுக்க மாட்டார் என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

வெற்றி
இந்த நிலையில் சசி தரூரை வீழ்த்தி காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுனா கார்கே வெற்றிபெற்றார். தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் கார்கே 7897 வாக்குகளைப் பெற்று வென்றுள்ளார். இதன் மூலம் 20 ஆண்டுகளுக்கு பின் காங்கிரஸ் கட்சிக்கு நேரு குடும்பத்தை சேராத ஒருவர் தலைவராகி உள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சசி தரூர் 1,072 வாக்குகளை மட்டுமே பெற்றார். காங்கிரஸ் கட்சியில் இந்த வெற்றி மிகப்பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாற்றம்
இந்த நிலையில்தான் காங்கிரஸ் தலைவர் தேர்தல் குறித்து திமுக செய்திதொடர்பாளர் கே.எஸ் ராதாகிருஷ்ணன் விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது. கட்சி தலைவர் தேர்தல் முறையை அவர் விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது. தலைவராக தேர்வு செய்யப்பட்ட மல்லிகார்ஜுனா கார்கே குறித்தும் அவர் விமர்சனம் செய்துள்ளார் என்கிறார்கள். காங்கிரஸ் கட்சியினர் இடையே அவரின் கருத்து விமர்சனங்களை சந்தித்தது.

கூட்டணி
திமுக - காங்கிரஸ் கூட்டணியாக உள்ள நிலையில், திமுக செய்திதொடர்பாளர் கே.எஸ் ராதாகிருஷ்ணன் இப்படி பேசியது கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் திமுக செய்திதொடர்பாளர் கே.எஸ் ராதாகிருஷ்ணன் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், கட்சி கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டு வருகிறார் கே. எஸ் ராதாகிருஷ்ணன். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் அவரின் செயல்பாடுகள் உள்ளன என்பதால் அவர் நீக்கப்படுகிறார் என்று அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications