திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட்
சென்னை: திமுகவின் செயல் தலைவராக உதயநிதி ஸ்டாலினை நியமிக்க மெல்ல மெல்ல காய்கள் நகர்த்தப்படுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கான காரணங்களை ஆராய 36 பேர் கொண்ட குழுவை திமுக தலைமை அமைத்தது. இந்தக் குழு மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்தக் கூட்டங்களில் மாவட்டச் செயலாளர்கள் (மா.செ.) மற்றும் ஒன்றியச் செயலாளர்கள் (ஒ.செ.) பெருமளவில் கலந்து கொள்கின்றனர். இதனால் பொதுக் கட்சி உறுப்பினர்கள் உண்மையான கருத்துகளை மனம் திறந்து சொல்ல முடியவில்லை என்கின்றனர். தோல்விக்கு முக்கியக் காரணமாக மா.செ. மற்றும் ஒ.செ.க்களின் செயல்பாடுகள் சொல்லப்படும் நிலையில், அவர்களுக்கு எதிரான விமர்சனங்களை எப்படி கட்சியினர் கூற முடியும் என்பது பெரிய கேள்வியாக உள்ளது.

இதனால் பெரும்பாலான கூட்டங்கள் உப்பு சப்பில்லாமல் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகின்றன. மேலும், குழுவில் உள்ளவர்களை சந்திக்கும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய மா.செ.க்கள், "ரிப்போர்ட்டை பார்த்து தயாரியுங்கள். எப்படி எழுத வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும் இல்லையா?" என்கிற வகையில் பேசி தங்களுக்கு சாதகமான அறிக்கையை உருவாக்க முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஜூன் 5-ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்படவிருக்கும் அறிக்கையில் சில முக்கியமான கருத்துகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதில் முக்கியமாக:
• இளைஞர்களை திமுக பக்கம் ஈர்க்கத் தவறிவிட்டோம். அவர்கள் பெரும்பாலும் தமிழக வெற்றிக் கழகம் பக்கம் தாவிவிட்டனர்.
• இளைஞரணிக்கு போதிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.
• உதயநிதி ஸ்டாலினுக்கு இந்தத் தேர்தலில் போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.
• அவரது தலையீடு இல்லாமலேயே வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
• இளைஞரணியில் உதயநிதி பரிந்துரை செய்தவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.
இந்தக் கருத்துகள் தலைமைக்கும் உகந்ததாக இருப்பதாக கட்சி வட்டாரங்கள் சொல்கின்றன. இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, திமுகவின் உயர்மட்டக் குழுவை கூட்டி விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்தக் கூட்டத்தில் இந்த அறிக்கையை ஆராய்ந்து, உதயநிதி ஸ்டாலினை கட்சியின் செயல் தலைவராக நியமிக்கும் விவகாரம் பரிசீலிக்கப்படும் என திமுகவின் மூத்த தலைவர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் பேசினால், "தேர்தல் தோல்வியை சரி செய்ய இளைஞர்களின் ஆதரவு அவசியம். அதற்கு உதயநிதியின் தலைமை தேவை என்பது பலரது கருத்து. அதனால்தான் இந்த முயற்சிகள்" என்கின்றனர்.
எனினும், இந்த நடவடிக்கை கட்சியில் சில முக்கிய தலைவர்களிடையே, ஸ்டாலின் அணியினர், கனிமொழி அணியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சில மூத்த தலைவர்கள் இதை வரவேற்கும் நிலையில், மற்ற சிலர் "அனுபவம் வாய்ந்த தலைவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்" என்கின்றனர்.
உதயநிதி ஸ்டாலின் தற்போது இளைஞரணி செயலாளராக இருந்து வருகிறார். அவருக்கு செயல் தலைவர் பதவி கிடைத்தால், அது திமுகவில் இரண்டாவது தலைமைப் பொறுப்பாக அமையும். இது கட்சியின் எதிர்கால திட்டங்களுக்கு புதிய உத்வேகம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுகவின் இந்த உள் நடவடிக்கைகள் அடுத்த ஆண்டுகளில் நடக்கவிருக்கும் பல முக்கிய தேர்தல்களுக்கு தயாரிப்பாக பார்க்கப்படுகிறது. ஜூன் 5-ம் தேதி சமர்ப்பிக்கப்படும் அறிக்கை மற்றும் அதன் பின்னணியில் நடக்கவிருக்கும் உயர்மட்ட ஆலோசனைகள் கட்சியின் எதிர்கால போக்கை தீர்மானிக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
- சிறப்பு நிருபர் எழில்
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications