தூர்வாஷ்டமி விரதம்: செல்வ வளம் பெருகும் கடன் நீங்கும் - குழந்தை பாக்கியம் கிடைக்கும்
ஆவணி மாதம் சுக்ல பட்ச அஷ்டமி தூர்வாஷ்டமி எனப்படும். அருகம் புல்லை பூஜை அறையில் வைத்து பூஜை செய்ய தடைகள் விலகி வாழ்வில் சந்தோஷம் பெருகும் என்கிறது சாஸ்திரம்.
சென்னை: ஆவணி மாதம் சுக்ல பட்ச அஷ்டமி தூர்வாஷ்டமியாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் விநாயகருக்கு அருகம் புல் கொண்டு அர்ச்சனை செய்து வழிபட தடைகள் விலகி வாழ்வில் சந்தோஷம் பெருகும். கடன் பிரச்சினை நீங்கும். மகாலட்சுமியை வழிபட செல்வ வளம் பெருகும், புத்திரபாக்கியம் கிடைக்கும்.
தூர்வாஷ்டமி விரதத்தை யார்வேண்டுமானாலும் கடைப்பிடிக்கலாம். குறிப்பாகப் பெண்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய விரதமாகும் இது. பெண்களுக்கென்றே விதிக்கப்பட்ட ஓர் உன்னதமான விரதம் என்றும் சொல்லலாம்.
தூர்வாஷ்டமி திதி இன்று பிற்பகல் 3.11 மணி முதல் செவ்வாய்கிழமை பகல் 01.09 மணி வரை உள்ளது.
வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாட்கள் லட்சுமிதேவியைப் பிரார்த்தித்துச் செய்யப்படும் விரதம் இது. ஒவ்வொரு நாளும் பக்தியோடு விரதம் இருந்து, கனகதாரா ஸ்தோத்திரம் முதலான திருமகள் துதிப்பாடல்களைப் படித்து திருமகளை வழிபட்டு வந்தால், நம் வறுமைகள் நீங்கும், வாழ்க்கை வளம் பெறும்.

விநாயகர் வழிபாடு
ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி என்றும் நீடூழி வாழ்க" என திருமணம் மற்றும் புதுமணை புகுவிழாக்களில் பெரியோர்கள் வாழ்த்துவதை பார்த்திருப்பீர்கள். அருகம்புல் எவ்வளவு காலம் மழை இல்லாவிட்டாலும் காய்ந்து போய் காணப்படுமே தவிர அழிந்து போகாது. சிறிது மழை பெய்தால் கூட உடனே துளிர்விடும். அதுபோல் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் சோர்ந்து போகாமல் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் அருகம்புல்லை உதாரணமாகச் சொல்லி வாழ்த்துவதைப் பார்க்கும்போதே அதன் மகத்துவம் நமக்குத் தெரியவரும்.

கடன் பிரச்சினை நீங்கும்
கணபதியின் பூஜைக்கு உரியதானது அருகம்புல். தூர்வை, மேகாரி, பதம், மூதண்டம் என பல பெயர்களால் சிறப்பிக்கப்படும் அருகம்புல் கணநாதருக்கு மட்டும் அல்ல, மூலிகையாக எடுத்துக்கொண்டால் நமக்கும் நலம் பயப்பவை தான். ஆன்மீகத்துடன் மருத்துவத்தைக் கலந்தே நம் முன்னோர்கள் சொல்லிவந்தனர். அருகம்புல் முழுத்தாவரமும் இனிப்புசுவையும் குளிர்ச்சித்தன்மையும் உடையது. உடல் வெப்பத்தை அகற்றும். சிறுநீர் பெருக்கும். குடல் புண்களை ஆற்றும். ரத்தத்தை தூய்மையாக்கும் மற்றும் உடலை பலப்படுத்தும், அருகம்புல்லை பிள்ளையார் புல் என்று அழைப்பார்கள். பல்வேறு சிறப்புகளைக் கொண்ட அருகம்புல்லை செவ்வாய்கிழமையன்று விநாயகருக்கு சாற்றி வணங்க தீராத கடன்பிரச்சினையும் தீரும்.

குழந்தை பாக்கியம் கிடைக்கும்
திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆன பின்னரும் குழந்தை பாக்கியம் இல்லாமல் பலர் இருக்கின்றனர்.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க நம்முடைய முன்னோர்கள் தூர்வாஷ்டமி விரதத்தை மேற்கொண்டு வந்தனர். இந்த விரதம் சந்ததியை ஒரு உருவாக்குவதற்கு மட்டுமல்லாமல், சந்ததியை வளர்ப்பதற்கும், சந்ததியின் ஆரோக்கியத்திற்கும் பெரிதும் துணைபுரியும். ஆவணி மாத வளர்பிறை அஷ்டமி தினத்தன்று அதிகாலையில் குளித்து விட்டு அருகம்புல் கொண்டு விநாயகரையும், சிவபெருமானையும் சேர்த்து வணங்கி பூஜை விரதத்தை தொடங்க வேண்டும். பூஜையறையில் அவல், பொரி, பால், வாழைப்பழம் படைத்து, விநாயகர் அகவல், 108 போற்றி, சிவபுராணம், தேவாரம், திருவாசகம் படிக்க வேண்டும்.

வம்சம் தழைக்கும் விரதம்
அருகம்புல்லை சந்தனம் குங்குமம் வைத்து வணங்க வேண்டும். ஸெளபாக்கியம் ஸந்ததிம் தேஹி ஸர்வ கார்ய கரீ பவ யதா சாகா ப்ரசாகாபிர் விஸ்த்ருதாஸி மஹீதலே ததா மமாபி ஸந்தானம் தேஹி த்வ மஜராமரம்" என்று சொல்லி பூஜிக்க வேண்டும். ஹே அருகம்புல்லே, நீ அம்ருதத்திலிருந்து உண்டானாய். தேவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப்படுகிறாய். எங்களுக்கு சௌபாக்யத்தையும் குழந்தை செல்வத்தையும் தந்து அனைத்து காரியங்களிலும் வெற்றியடைய அருள் புரிய வேண்டும். எவ்வாறு நீ கிளை உபகிளை என்று பரந்து விரிந்து பூமி முழுவதும் பரவுகின்றாயோ அது போன்றே எனது வம்சத்தையும் மகன், மகள், பேரன், பேத்தி அவர்களுக்கு குழந்தைகள் என விரிவடையச் செய்வாயாக என்று கூறி வணங்க வேண்டும். மாலையில் கோவிலுக்கு சென்று விநாயகர், சிவனுக்கு விளக்கேற்றி வழிபடுவது அவசியம்.

சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்
வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை அஷ்டமி வரை 16 நாட்கள் விரதமிருந்து மகாலட்சுமியை வழிபடுவது சோடச லட்சுமி விரதமாகும். இதனால் 16 செல்வங்களையும் நிறைவாக பெற்று வாழலாம். இந்த நாட்களில் ஒரு வேளை பகலில் மித உணவு உண்டு, மாலையில் ஸ்ரீ மகாலட்சுமி மற்றும் அஷ்ட லட்சுமிகளை வணங்கி, நிவேதனம் செய்த பால் பழம் உண்டு விரதம் முடிப்பது பழக்கம் ஆகும். இந்த விரதத்தை கடைபிடித்தால் சகல சௌபாக்கியங்களும் ஏற்படும். செல்வ வளம், நீண்ட ஆயுள், நல்ல புத்திர பாக்கியம் பெறுவதற்கும், நினைத்த காரியங்கள் கைகூடுவதற்கும் இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications