மனசுக்குள் கார் ரேசர்னு நினைப்பு.. எங்க ராசா போற.. எங்ககிட்டயேவா.. சேஸ் செய்து பிடித்த சென்னை போலீஸ்
சென்னை : மனசுக்குள் கார் ரேசர்னு நினைப்பு.. பிரபல இருசக்கர வாகன திருடன் படப்பை வினோத், சென்னை தாம்பரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் காரினை திருடி கொண்டு தடுப்புகளை உடைத்துக் கொண்டு தப்பினார். அவரை சினிமா பாணியில் போலீசார் மடக்கி பிடித்தனர். தப்பியோடிய மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.
Recommended Video
சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (62) விமான நிலையத்தில் வாடகை கார் ஓட்டுனராக பணிபுறிந்து வருகிறார்.
கடந்த 30ம் தேதி அன்று காலை வீட்டில் மின் விளக்குகள் எரிந்ததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கபட்டிருபதை கண்டு கருப்பையா மற்றும் அக்கம் பக்கத்தினர் போலிசாருக்கு தகவல் அளித்தனர்.

ஜிபிஎஸ் கருவி
அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலிசார் காரின் என்னை வைத்து தேடும் பணியில் ஈடுபட்டிருந்த போது திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் இருப்பதை ஜி.பி.எஸ் கருவி மூலம் கண்டுபிடித்த போலீசார் உடனடியாக அங்குள்ள ரோந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

சிக்கியி பிரபல திருடன்
இதனையடுத்து தடுப்புகளையும் உடைத்து கொண்டு வேகமாக சென்ற காரை விரட்டி பிடித்த போலிசார் கொள்ளையனை சுற்றி வளைத்து கைது செய்து பீர்கன்காரனை போலிசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் நடத்தபட்ட விசாரனையில் பிரபல இருசக்கர வாகன திருடன் படப்பை வினோத் (19) என்பது தெரியவந்துள்ளது.

நகை பணம்
மேலும் அவனிடமிருந்து தங்க நகைகள் ,15,000 ரொக்க பணம் மற்றும் காரினை பறிமுதல் செய்த போலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.கொள்ளை சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த மற்றொரு நபரை தேடி வருகின்றனர். சென்னையில் குற்றவாளிகளை

'ஷூ' க்கள் திருட்டு
இன்னொரு குற்ற சம்பவம் : சென்னை பெரியமேடு பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள 'ஷூ'க்கள் கொஞ்சம் கொஞ்சமாக திருட்டு போய் உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை பெரியமேடு பகுதியில் முகமது அப்தாப் என்பவர் 'ஷூ'க்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவரது கடையில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள 'ஷூ'க்கள் கொஞ்சம் கொஞ்சமாக திருட்டு போய் இருக்கிறது. கடையில் வேலை செய்யும் ஊழியர்களே இந்த திருட்டில் ஈடுபட்டது அம்பலமாகி உள்ளது. இது தொடர்பாக கடை ஊழியர்கள் 4 பேர் மீது புகார் கொடுக்கப்பட்டு விசாரணை நடக்கிறது. கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications