ரசிகர்களை மதிக்காத பிசிசிஐ.. மிட் நைட்டில் அறிவிக்கப்பட்ட இந்திய அணி.. வீரர்களை தேர்வு செய்தது யார்?
சென்னை: இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த அணியில் ஏன் சீனியர் வீரர்கள் இடம்பெறவில்லை, எந்தெந்த வீரர்கள் காயம் காரணமாக விலகியுள்ளார்கள், துணை கேப்டன் பதவியில் இருந்து கேஎல் ராகுல் நீக்கப்பட காரணம் என்ன, எந்தக் குழு அணியை தேர்வு செய்தது என்ற எந்த தகவலும் பிசிசிஐ தரப்பில் வெளியிடப்படவில்லை. ரசிகர்களை மதிக்காமல் செயல்பட்டு வரும் பிசிசிஐ நிர்வாகம் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இலங்கை அணி மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்ததால், சொந்த மண்ணில் இலங்கை அணியை இந்திய அணி வீழ்த்துமா என்ற கேள்வி ரசிகர்களிடையே இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் 2023ம் ஆண்டு உலகக்கோப்பைக்கான அணியை தயார் செய்வதற்கான நேரமும் கூடியுள்ளது. 2013ம் ஆண்டுக்கு பின் அனைத்து ஐசிசி தொடர்களிலும் சொதப்பி வரும் இந்திய அணி, சொந்த மண்ணிலாவது வாகை சூடுமா என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

இந்திய அணி தேர்வு
இந்த நிலையில் இலங்கை அணிக்கு எதிரான டிநொ மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி நேற்று இரவு அறிவிக்கப்பட்டது. அதில் ஹர்திக் பாண்டியா டி20 தொடருக்கான கேப்டனாகவும், ரோகித் சர்மா ஒருநாள் தொடருக்கான கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அதேபோல் திருமணம் காரணமாக டி20 தொடருக்கு கேஎல் ராகுல் தேர்வு செய்யப்படவில்லை என்று பார்க்கப்படுகிறது.

யார் அணியை தேர்வு செய்தது?
ஆனால் ஒருநாள் அணியில் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் வகித்து வந்த துணை கேப்டன் பதவி ஹர்திக் பாண்டியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் டி20 அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோர் ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்று எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

எந்தெந்த வீரர்கள் காயம்?
ஒரு செய்தியாளர் சந்திப்பு கூட நடத்தாமல், எந்த வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது, எந்த வீரர் காயம் காரணமாக விலகியுள்ளார்கள், குஜராத் தேர்தலில் பம்பரமாக சுழன்று மனைவிக்காக பிரச்சாரம் செய்த ஜடேஜா ஏன் இதுவரை அணிக்கு மீண்டும் திரும்பவில்லை, யார் இந்த அணியை தேர்வு செய்தார்கள் என்ற எந்த விளக்கமும் பிசிசிஐ தரப்பில் கொடுக்கப்படவில்லை. ஏற்கனவே டி20 உலகக்கோப்பைக்கான அணியை தேர்வு செய்த குழு மொத்தமாக நீக்கப்பட்ட நிலையில், அடுத்த தேர்வுக் குழு குறித்த எந்த தகவலையும் பிசிசிஐ வெளியிடவில்லை.

ரசிகர்களை மதிக்காத பிசிசிஐ
தேர்வுக் குழு தேர்வு செய்யாத அணி என்பதால், வீரர்களை பாதுகாத்து சரியான பயன்படுத்தாமல் முடியாத நிலை உருவாகியுள்ளது. டி20 உலகக்கோப்பைத் தோல்விக்கு பின், பிசிசிஐ மர்மம் நிறைந்த அமைப்பாக மாறியுள்ளது. அதேபோல் சர்வதேச அளவில் அதிக பொருளாதாரத்தை ஈட்டும் பிசிசிஐ, அதற்கு காரணமாக ரசிகர்களை மொத்தமாக மதிக்காமல் செயல்பட்டு வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications