இந்த நேரத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டியது கட்டாயம்.. பாஜகவிற்கு எதிராக ஸ்டாலின் அதிரடி முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை : எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கையை திமுக ஆதரிப்பதாக கூறிய முதல்வர் ஸ்டாலின், மாநில உரிமைகளுக்கு மதிப்பளிக்காத பா.ஜ.க. அரசால் கூட்டாட்சிக்கொள்கை அழிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய நேரத்தில், எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு நிற்க வேண்டியது கட்டாயம்.
சமீபத்திய பாராளுமன்ற கூட்டத்தொடர் எங்கள் ஒற்றுமையைக் கண்டது. அது வலுவாக வளர வேண்டும் என்றார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 18 எதிர்கட்சிகள் இணைந்து பெகாசஸ் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்தன. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு எதிர்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் நின்றதால், கூட்டத்தொடர் முழுவதும் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

எதிர்கட்சிகளின் இந்த ஒற்றுமையை தக்கவைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதற்காக சோனியா காந்தி தலைமையில் கூட்டணி கட்சிகள் மற்றும் ஒத்த கருத்துள்ள கட்சிகளின் தலைவர்களுடன் வெள்ளிக்கிழமை மாலை ஆலோசனை நடைபெற்றது.

எதிர்க்கட்சிகள்

எதிர்க்கட்சிகள்


இந்தக் கூட்டத்தில் பாஜகவின் மக்கள் விரோத போக்கை கண்டித்து செப்.20 முதல் 30ஆம் தேதி வரை நாடு தழுவிய போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இந்தக் கூட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது : பெகாசஸ் முறைகேடு குறித்து பதில் அளிக்க மறுப்பு, விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை ரத்து செய்ய மறுத்தது, கொரோனா விவகாரத்தில் மோசமான மேலாண்மை, பணவீக்கம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்க மறுத்து நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரை மத்தியில் ஆளும் கட்சி சீர்குலைத்த விதத்தை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். பெகாசஸ் இராணுவ ஸ்பைவேரை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி அங்கீகரிக்கப்பட்ட கண்காணிப்பு, விவசாயிகளுக்கு எதிரானமூன்று சட்டங்களை ரத்து செய்தல், கோவிட் -19 இன் போது மோசமான நிர்வாகம், அதிகரித்த பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்ற மக்களை பாதிக்கும் பல பிரச்சினைகள் ஆளும் அரசாங்கத்தால் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டன.

எதிர்க்கட்சிகள் போராட்டம்

எதிர்க்கட்சிகள் போராட்டம்

எதிர்க்கட்சிகளின் போராட்டங்களை சீர்குலைக்க ஆளும் கட்சி முயற்சி செய்தது. பெண் எம்.பி.க்கள் காயமடைந்தனர். முன் எப்போது இல்லாத அளவிற்கு மோசமான காட்சிகளை நாடாளுமன்ற கண்டது. கவுன்சில் மற்றும் மக்கள் தொடர்பான முக்கியமான பிரச்சினைகளை எழுப்புவதற்கான எதிர்க்கட்சிகளின் உரிமையை மத்தியிலும் ஆளும் அரசு மறுத்தது. அதேநேரம் ராளுமன்றத்தின் இரு அவைகளிலும் வேண்டிய சட்டங்களை மட்டும் நிறைவேற்றிக்கொண்டது.

அபாயகரம்

அபாயகரம்

பிரதமர் தனது சுதந்திர தின உரையில், மக்களின் துயரங்கள் தொடர்பான ஒரு பிரச்சினையிலும் கவனம் செலுத்தவில்லை. பேச்சில் சொற்பொழிவுகள், வெற்று முழக்கங்கள் மற்றும் தவறான தகவல்கள் இருந்தன. உண்மையில், இது 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்ட முந்தைய உரைகளின் மறு பேக்கேஜிங் ஆகும். இந்த பேச்சு நாட்டு மக்களின் வாழ்க்கை மேலும் மேலும் அழிக்கப்படும் என்பதற்கான ஒரு அபாயகரமான எச்சரிக்கையாகும்.

மோசமான நிர்வாகம்

மோசமான நிர்வாகம்

கோவிட் -19 தொற்றுநோயைக் கையாள்வதில் அரசின் மோசமான நிர்வாகத்தின் விளைவாக ஏராளமான மக்கள், குறிப்பாக தங்கள் அன்புக்குரிய உறுப்பினர்களை இழந்த குடும்பங்கள் மீது கடுமையான வலியை ஏற்படுத்தியுள்ளது. நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை மற்றும் இறப்புகள் இரண்டையும் அறிக்கையிடும் நிகழ்வுகள் பல சர்வதேச மற்றும் தேசிய நிறுவனங்களால் குறிப்பிடப்பட்டுள்ளன, அவர்கள் உண்மையான புள்ளிவிவரங்கள் அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டதை விட குறைந்தது ஐந்து மடங்கு அதிகம் என்று மதிப்பிடுகின்றனர்.

தடுப்பூசி

தடுப்பூசி

பேரழிவை ஏற்படுத்தக்கூடிய மூன்றாவது அலையைத் தடுக்க, தடுப்பூசி விகிதம் அதிவேகமாக அதிகரிக்க வேண்டியது அவசியம். தற்போது, எங்கள் 18 வயது நிறைவடைந்த மக்கள்தொகையில் வெறும் 11.3% மட்டுமே இரண்டு டோஸ்களை பெற்றுள்ளனர் . 40 சதவீதம் பேர் மட்டுமே ஒரு டோஸ் பெற்றுள்ளனர். இந்த விகிதத்தை பார்த்தால், இந்த ஆண்டு இறுதிக்குள் 18 வயது நிறைவடைந்த மக்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கான இலக்கை அடைய இயலாது. தடுப்பூசி மெதுவாக இருப்பதற்கு முக்கிய காரணம் தடுப்பூசி பற்றாக்குறை தான் காரணம்.

தலைவர்கள்விடுதலை

தலைவர்கள்விடுதலை

ஜம்மு காஷ்மீரில் உள்ள அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும். ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும். நியாயமான முறையில் விரைவில் தேர்தலை நடத்த வேண்டும்" என்று அனைத்துகட்சிகளின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக அழிக்கிறது

பாஜக அழிக்கிறது

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின், ",மாநில உரிமைகளுக்கு மதிப்பளிக்காத பா.ஜ.க. அரசால் கூட்டாட்சிக்கொள்கை அழிக்கப்பட்டு வருகிறது.இத்தகைய நேரத்தில், எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு நிற்க வேண்டியது கட்டாயம்.சமீபத்திய பாராளுமன்ற கூட்டத்தொடர் எங்கள் ஒற்றுமையைக் கண்டது. அது வலுவாக வளர வேண்டும் என்றார்.. மேலும் எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டு அறிக்கையை திமுக ஆதரிக்கிறது" என்று கூறியுள்ளார்,

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+