நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா.. சென்னையில் நாளை முதல் வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை!
சென்னை: சென்னையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதனால் வீடு வீடாக சென்று சுகாதாரத் துறை அதிகாரிகள் காய்ச்சல் பரிசோதனை செய்து வருகிறார்கள்.
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று தற்போது கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. நாள்தோறும் பாதிப்பு எண்ணிக்கை 4 இலக்கத்தில் இருந்து வருகிறது.
சட்டசபைத் தேர்தல் காரணமாக பொதுமக்கள் பொது இடங்களில் கூடியதாலும் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரத்தாலும் நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. முகக் கவசம் அணியாமல் சமூக இடைவெளியை பின்பற்றாமல் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதால் தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.

காய்ச்சல் பரிசோதனை
இதனால் தேர்தலுக்கு முன்பே வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்யும் திட்டத்தை மீண்டும் கையில் எடுக்க மாநகராட்சி முடிவு செய்தது. இதற்காக 16 ஆயிரம் களப்பணியாளர்கள், தன்னார்வலர்கள் மீண்டும் பணியில் அமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

பணியாளர்கள்
மேலும் 100 மருத்துவர்கள், 4 ஆயிரம் ஆய்வக தொழில்நுட்ப பணியாளர்களை நியமித்தது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவிய போது மேற்கொள்ளப்பட்ட வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை, கண்காணிப்பு, வீடுகளில் தனிமைப்படுத்துதல் போன்ற தடுப்பு பணிகள் மீண்டும் தீவிரப்படுத்தப்படுகிறது.

வீடு வீடாக
தேர்தல் நேரத்தில் இதனை செயல்படுத்த முடியாததால் இந்த திட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. தேர்தல் பிரச்சாரத்தின் போது காய்ச்சல் பரிசோதனை செய்யும் போது அது பலனை அளிக்காது என்பதால் அதிகாரிகள் ஒத்தி வைத்தனர். தற்போது தேர்தல் முடிந்த நிலையில் நாளை முதல் வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை நடத்தப்படுகிறது.

சென்னையில் எங்கு அதிகம்
பாதிப்பு அதிகம் உள்ள தேனாம்பேட்டை, அண்ணாநகர், கோடம்பாக்கம், அடையாறு, ராயபுரம், அம்பத்தூர் மண்டலங்களில் அதிகமான ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் பரிசோதனை கருவிகளும் வழங்கப்பட்டுள்ளன.

சளி, இருமல்
லேசான காய்ச்சல், சளி, இருமல் அறிகுறி உள்ளவர்கள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களை உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே நாளை முதல் சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கண்காணிப்பும், தடுப்பு நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications