இலங்கைக்கு அடுத்து இந்தோனேசியா.. இறந்த குமரி மீனவர்! சர்வதேச நீதிமன்றத்தை நாட சொல்லும் வேல்முருகன்
சென்னை: இந்தோனிஷியாவில் குமரி மீனவர் மரணம் தொடர்பான விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றத்தில் வழங்குப்பதிவு செய்ய, தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்வதாக அக்கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் வலியுறுத்தி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி, குமரி மீனவ சகோதரர்கள் 8 பேர் மீன்பிடிக்க சென்றனர்.
குமரி மீனவர்கள் சென்ற படகு கடல் எல்லையை தாண்டி இந்தோனேஷியா கடல் பரப்பு பகுதிக்கு சென்றுவிட்டதாக, அந்நாட்டு கடற்படையால் படகும் அந்த 8 குமரி மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்தோனேசியா கடற்படை
தொடர்ந்து, அவர்கள் இந்தோனேஷியா சிறையில் அடைக்கப்பட்டனர். அடுத்த சில நாட்களில் நான்கு மீனவர்கள் மட்டுமே விடுவிக்கப்பட்டனர். எஞ்சிய மீனவ சகோதரர்கள் தூத்தூரை சேர்ந்த மரிய ஜெசின் தாஸ், பூத்துறையை சேர்ந்த இம்மானுவேல், திருவனந்தபுரம் வெட்டுதுறையை சேர்ந்த சிவனின், மன்னாட்டு பகுதியை சேர்ந்த ஜோமோன் ஆகிய நான்கு பேரும் ஒருவர் பின் ஒருவராக உடல் நிலை பாதிக்கப்பட்டனர்.

மீனவர் மரணம்
குறிப்பாக, மரியஜெசின் தாஸ் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டார். அவர் திடீரென மே 20ஆம் தேதி மரணமடைந்தார். சமீபத்தில், மருத்துவமனை நிர்வாகம் வழங்கிய உடற்கூராய்வு அறிக்கையில், மீனவ சகோதரர் மரியஜெசின் தாசின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நீதிமன்றம்
இதன் மூலம், மரியஜெசின் தாஸை இந்தோனேசிய அதிகாரிகள் அடித்து துன்புறுத்தி இருப்பது தெரிய வருகிறது. எனவே, இந்த விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றத்தில் வழங்குப்பதிவு செய்ய தமிழ்நாடு அரசும் ஒன்றிய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.

இந்தியா, இலங்கை கடற்படை
மேலும், இந்தியா, இலங்கை, இந்தோனிஷியா உள்ளிட்ட நாடுகளின் கடற்படையால், தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. இதனை தடுக்கும் வகையில், ஒன்றிய அரசுடன், தமிழ்நாடு அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி, மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications