Gold price: ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்! ஞாயிற்றுக்கிழமையிலும் தங்கம், வெள்ளி விலை உயர்வு!
சென்னை: ஈரான் மீது இஸ்ரேல்- அமெரிக்கா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட் விடுமுறையான இன்று தங்கம், வெள்ளி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ 1800 உயர்ந்துள்ளது.
ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி வந்த அமெரிக்கா, நேற்று (பிப்.28) அந்த நாட்டின் மீது தாக்குதலை தொடங்கியது. அமெரிக்காவுடன் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் முக்கிய பகுதிகள் மீது குண்டு மழை பெய்தது.

ஈரானின் உச்ச தலைவர் கமேனி தங்கியிருக்கும் மாளிகை மீது இந்த தாக்குதல் நடந்தது. இதில் வான்வழித் தாக்குதலில் கமேனி கொல்லப்பட்டதாக டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரானும் இதை உறுதி செய்து 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்து ஒரு வாரத்திற்கு பொது விடுமுறையை அறிவித்துள்ளது.
மேலும் சென்னையில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நடந்து வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதுவுமாக தங்கம், வெள்ளி விலை உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட் விடுமுறை என்பதால் சனிக்கிழமை விலைக்கே தங்கம், வெள்ளி விற்பனையாகும். ஆனால் இன்றைய தினம் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலால் தங்கம், வெள்ளி விலை உயர்ந்துள்ளது.
அதன்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ 1800 உயர்ந்து, ஒரு சவரன் ரூ 1,26,200-க்கும், கிராமுக்கு ரூ 225 உயர்ந்து, ஒரு கிராம் ரூ 15,775-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அது போல் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ 5 உயர்ந்து, கிராம் ரூ 325-க்கும், கிலோவுக்கு ரூ 3,25,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ 7000 உயர்ந்துள்ளது. இதுகுறித்து தங்க நகை வணிகர் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியிருப்பதாவது: இந்த விலை உயர்வு முழுக்க முழுக்க ஈரான் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்தான்!
இந்த போரால் பொருளாதாரத்தில் பெரிய பாதிப்பும் ஏற்படும் என்ற நோக்கிலும் பணத்திற்கு மாற்றாக தங்கத்தின் மீது முதலீடுகள் உயர்ந்து வருவதும், வரும் காலங்களில் தங்கத்தின் மீது முதலீடுகள் பெரிய அளவில் உயரும் என்ற நோக்கத்திலும் தங்கத்தின் விலை அதிகமாக உயர்ந்து வருகிறது.
போரின் சூழலை பொருத்து தங்கத்தின் விலையில் பெரிய அளவில் மாற்றம் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த போரில் ஈரானை தனிமைப்படுத்த விடமாட்டோம். நாங்களும் இந்த போரில் இறங்குவோம் என ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளன. அது மேலும் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தக் கூடிய சூழல் உள்ளதால் இன்னும் தங்கம், வெள்ளி விலை பெருமளவில் உயரும்.
ரஷ்யா, சீனா அறிவிப்பால் உலக பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே வரும் நாட்களில் தங்கம், வெள்ளி விலை உயர வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார். ஏற்கெனவே ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடைகள், சீனா- இந்தியா மீதான வரி உயர்வுகள், மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றங்கள் போன்றவையால் தங்கம் விலை உயர்ந்துக் கொண்டே வருகிறது. தற்போது மேலும் உயரும் என ஜெயந்திலால் சலானி சொல்லியிருப்பது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
ஈரானை தாக்கட்டுமா? பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீரின் மூக்கை உடைத்து அனுப்பிய சவுதி ‘பிரின்ஸ்' -
ஈரானை சல்லி சல்லியாக நொறுக்கிய அமெரிக்கா.. இஞ்ச் இஞ்சாக சால்லடை போட்ட இஸ்ரேல்! எத்தனை தாக்குதல்? -
அமெரிக்காவின் பாதுகாப்பு வேலைக்கு ஆகல! ஈரான் அதிரடி அட்டாக்! ஜோர்டான், சவுதி பாதுகாப்பு கேள்விக்குறி -
இன்னும் ’மெயின்’ ஆயுதத்தையே எடுக்கலை.. எடுத்தா முடிஞ்சுடுவீங்க! அமெரிக்கா - இஸ்ரேலை எச்சரித்த ஈரான்! -
ஈரானை தாக்கிய ஐக்கிய அரபு அமீரகம்.. துபாயை தொடர்ந்து குறிவைத்ததால் ஆக்ரோஷம்! போர் முடிய சான்ஸ் இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
நீங்கள் எதிர்பார்க்காத ஒன்று நடக்க போகுது.. காத்திருங்கள்.. புதிர் போடும் இஸ்ரேல் நெதன்யாகு.. கொடுமை -
போரால் துபாயில் உணவு பஞ்சம்? 8 நாட்களுக்கு தேவையான உணவு மட்டுமே இருக்கிறதாம்! அதிர்ச்சி தகவல் -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா! -
அடுத்த ஓரிரு மணி நேரத்தில் நடக்கப்போகும் சம்பவம்.. வார்னிங் கொடுத்த டிரம்ப்! ஈரான் கதை முடியப்போகுது -
ஈரானை அடிச்சா இந்தியாவுக்கு வலிக்கும்.. ஒரே ஒரு நல்லது மட்டும் நடந்துருக்கு! இனிமேல் தான் சிக்கலே!












Click it and Unblock the Notifications