திருத்தணி பழைய பஸ் ஸ்டாண்டில் என்னாச்சு பாருங்க? கமிஷனர் குட்-பை சொன்ன மறு நிமிடம் பெரிய ட்விஸ்ட்
சென்னை: திருத்தணி பழைய பேருந்து நிலையம் முழுமையாக மூடப்படுவதாக நகராட்சி ஆணையர் அறிவித்ததை தொடர்ந்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.. இந்த அதிரடி முடிவால் ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் வியாபாரிகள், கமிஷனர முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையின் பின்னணியில் உள்ள முழுமையான விவரங்களை இங்கு சுருக்கமாக பார்ப்போம்..!
திருத்தணி நகராட்சியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பொதுமக்களுக்கு மேம்பட்ட வசதிகளை வழங்கவும் திருத்தணி-அரக்கோணம் சாலையில் 21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது.

திருத்தணி பழைய பேருந்து நிலையம்
இந்த புதிய பஸ் ஸ்டாண்டு கடந்த மாதம் 4-ம் தேதி திறக்கப்பட்டு, மார்ச் 30-ம் தேதி முதல் பேருந்துகள் முழுமையாக இயங்கத் தொடங்கின. இருப்பினும், பழைய பேருந்து நிலையத்தை மையமாக வைத்து நிகழ்ந்த சில செயல்பாடுகளால் தற்போது அங்கு பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்த பிறகும், பல தனியார் பேருந்துகள் தொடர்ந்து பழைய புதிய பஸ் ஸ்டாண்டிலேயே தங்கி நின்று பயணிகளை ஏற்றி வந்தன. இதனால் புதிய புதிய பஸ் ஸ்டாண்டு அதன் முழுமையான பயன்பாட்டிற்கு வரவில்லை.
புது பஸ் ஸ்டாண்டு
குறிப்பாக, தனியார் பேருந்துகள் பழைய நிலையத்தில் அதிக நேரம் நிறுத்தப்படுவதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இது ஒருபுறமிருக்க, பெரும்பாலான பயணிகள் பழைய நிலையத்திலேயே காத்திருந்ததால், புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயங்கும் அரசு பேருந்துகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர், நகராட்சி ஆணையர் கன்னியப்பனிடம் முறையான புகார் ஒன்றை அளித்திருந்தார்.
இந்தப் புகாரைத் தொடர்ந்து, நகராட்சி ஆணையர் கன்னியப்பன் நேற்று முன்தினம் பழைய பேருந்து நிலையத்திற்கு நேரில் சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.
நகராட்சி ஊழியர்களுக்கு
அப்போது அங்கு விதிகளை மீறி நீண்ட நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளை உடனடியாக எடுக்குமாறு ஓட்டுநர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், பழைய பேருந்து நிலையத்தை முழுமையாக மூடுவதற்கு நகராட்சி ஊழியர்களுக்கு ஆணையிட்டார். இனி வரும் காலங்களில் பழைய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இயங்காது என்றும், அனைத்து பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து மட்டுமே இயக்கப்பட வேண்டும் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
ஆணையரின் இந்த அதிரடி நடவடிக்கையைக் கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் மற்றும் வியாபாரிகள் என 50-க்கும் மேற்பட்டோர் திடீரென ஆணையர் கன்னியப்பனை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பெரும் வாக்குவாதம் வெடித்தது.
பயணிகள் வாக்குவாதம்
"அனைத்து பேருந்துகளும் பழைய பேருந்து நிலையம் வழியாக வந்து நின்று செல்ல வேண்டும்; அப்போதுதான் எங்களுக்கு வசதியாக இருக்கும்" என்று பயணிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், தனியார் பேருந்து ஓட்டுநர்கள் பயணிகளை ஏற்றுவதில் காட்டும் அடாவடித்தனம் குறித்தும், அப்பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை சீர்செய்ய வேண்டிய அவசியம் குறித்தும் அவர்கள் ஆணையரிடம் ஆவேசமாக முறையிட்டனர்.
பொதுமக்களின் போராட்டத்தை அடுத்து விளக்கமளித்த ஆணையர், தனியார் பேருந்துகள் பழைய பஸ் ஸ்டாண்டுக்கு வந்து பயணிகளை இறக்கிவிட்டு உடனடியாக ஏற்றிச் செல்லலாம், ஆனால் எக்காரணம் கொண்டும் அங்கு பஸ்களை நீண்ட நேரம் நிறுத்தி வைக்கக் கூடாது. இந்த விதிகளை மீறும் பேருந்துகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என அவர் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த முற்றுகை போராட்டம் மற்றும் வாக்குவாதம் காரணமாக திருத்தணி பழைய பேருந்து நிலையப் பகுதியில் சுமார் அரை மணி நேரம் கடும் பரபரப்பு நிலவியது. ஆனால் இப்போது நகராட்சி நிர்வாகம் எடுத்துள்ள இந்த முடிவால், பயணிகள் அனைவரும் இனி புதிய பேருந்து நிலையத்தையே பிரதானமாகப் பயன்படுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாம்...!!
-
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
கூட்டணி மாறியதால் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கலை! ஆனால் அது உண்மைதான்! எடப்பாடி பழனிசாமி -
நகைக்கடன் வைத்த 3 பேரில் ஒருவர் கவனிக்கலனா பிரச்சனை? RBI எச்சரிக்கை என்ன சொல்கிறது? -
எத்தனை வருட சோகம்.. எவ்வளவு டிரைவர்கள் ஏக்கம்.. முடிவிற்கு வரும் தொப்பூர் கணவாய் கொடூரம்.. எப்படி? -
ரூ.1 லட்சம் கோடி இழப்பை சந்தித்த அம்பானி குடும்பம்.. பங்குச் சந்தையில் என்ன நடந்தது? -
2005ல் பல்லாவரம் ரேடியல் சாலையில் 10 லட்சத்திற்கு இடம் வாங்கியிருந்தால் இன்று என்ன விலை தெரியுமா? -
பலரின் வேட்புமனு நிராகரிக்கப்படலாம்.. போச்சு விஜய் தவெகவிற்கு இருக்கும்... பெரிய சிக்கலே இதுதான்! -
நேரம் பார்த்து அடிக்கும் சவுதி அரேபியா.. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அச்சம்? -
அரசு பேருந்தில்.. வழித்தட டிஸ்ப்ளேவில் 'தவெக' என ஓடியதால் ஷாக்! போக்குவரத்துக் கழகம் விளக்கம்












Click it and Unblock the Notifications