கண்காணிப்பு வளையத்தில் 'கூகுள் பே, போன் பே' பணப் பரிவர்த்தனை - தமிழக தேர்தல் ஆணையம்
சென்னை: கூகுள் பே, போன் பே மூலம் வாக்காளர்களுக்கு பணப் பரிவர்த்தனை செய்யப்படுவது கண்காணிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 2ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மே 6ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு, தமிழக சட்டமன்ற தேர்தலை கண்காணிக்க 4 சிறப்பு பார்வையாளர்கள் தமிழகம் வர உள்ளனர்.

அதன்படி செலவின பார்வையாளர்களாக மதுமகாஜன், பாலகிருஷ்ணன் (ஓய்வு பெற்ற ஐஆர்எஸ் அதிகாரிகள்) ஆகிய 2 பேரும், பொது பார்வையாளராக அலோக்வர்தன் (ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி), காவல்துறை சிறப்பு பார்வையாளராக தர்மேந்திரகுமார் (ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி) ஆகியோர் இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர்.அதேபோன்று தமிழகத்தில் இருந்து தேர்தல் நடைபெறும் மற்ற மாநிலங்களுக்கு 60 பேர் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் அதிகாரிகள் சிறப்பு பார்வையாளர்களாக செல்கின்றனர்.
தமிழகத்தில், இதுவரை பறக்கும் படை, வருமான வரி துறை நடத்திய சோதனையில் இதுவரை பணம், பரிசு பொருள் என ₹15.20 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் பணமாக மட்டும் ₹14.13 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது.
தவிர டிஜிட்டல் பரிவர்த்தனைகளான கூகுள் பே, போன் பே மூலம் வாக்காளர்களுக்கு பணப் பரிவர்த்தனை மேற்கொள்வதும் கண்காணிக்கப்படுகிறது. இது போன்ற தளங்கள் மூலம் எந்த கணக்கில் இருந்து பணப்பரிமாற்றம் மேற்கொள்ளப்படுகிறது என்பது வங்கிகளில் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications