பிரச்சனை வரும் முன்பே உஷாரான தமிழக அரசு..சென்னை, கோவை போல்..மற்ற பகுதிகளுக்கும் வருகிறது கட்டுப்பாடு
சென்னை : கொரோனா வைரஸ் பாதிப்பு பெரிய அளவில் பாதிக்கும் முன்பே இந்த முறை உஷாரான தமிழக அரசு, கொரோனாவின் தொற்று எளிதில் பரவ வாய்ப்பு உள்ளதாக கருதப்படும் கூட்டம் அதிகம் கூடும் வணிக பகுதிகளை மொத்தமாக மூட உத்தரவிட்டது.
இதன் காரணமாக சென்னையில் கடைகள் மூடப்பட்டன. கோவையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மற்ற பகுதிகளிலும் லாக்டவுன் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் பெரிய அளவில் உச்சம் பெறவில்லை. கட்டுக்குள் தான் இருக்கிறது. ஆனால் அண்டை மாநிலமான கேரளாவில் மிகப்பெரிய அளவில் உயர்ந்து வருவதால், கட்டுப்பாடுகளை அதிகரித்து வருகிறது தமிழக அரசு. கேரளாவில் இருந்து வருபவர்கள் கட்டாயம் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ்கள் வேண்டும் அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. எல்லையில் சோதனையை தீவிரமாக்கியும் வருகிறது.

3வது அலை
எனினும் முக்கிய நகரங்களான சென்னை, கோவையில் கொரோனா தொற்று உயர்ந்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. முதல் அலையில் கோயம்பேடு சந்தையில் பரவிய தொற்றுதான் மொத்த தமிழநாட்டையும் பெரிய அளவில் பீதிக்குள்ளாக்கியது. எனவே அதுபோன்று 3வது அலையில் ஏற்பட்டுவிடக்கூடாது என்பது அரசு உறுதியாக உள்ளது. அதன்வெளிப்பாடாகவே கூட்டம் அதிகம் கூடிய சென்னையின் முக்கிய சாலைகளில் உள்ள கடைகளை உடனடியாக அடைக்க அரசு உத்தரவிட்டது. சென்னையில் உள்ள திநகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, திருவல்லிக்கேணி, அண்ணாசாலை உள்பட சென்னையின் முககிய பகுதிகளில் உள்ள அனைத்து வணிக தலங்களும் அடைக்கப்பட்டுள்ளன.

கட்டுப்பாடுகள்
இதேபோல் கோவை மாவட்டத்தில் நேற்று முதல் (ஆகஸ்ட் 3) முதல் காய்கறி, மளிகைக் கடைகள், பேக்கரிகள், டீ கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது.. மீன, இறைச்சிக் கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும், டாஸ்மாக் மதுபானக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. சுற்றுலாத் தலங்கள், அருங்காட்சியகங்களில் பொது மக்கள் பாா்வைக்கு தடை விதிக்கப்படுகிறது. அனைத்து பூங்காக்களும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் பொது மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டாலும் கடுமையாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முககவசம், சமூக இடைவெளி ஆகிய விஷயங்களில் இப்போதே அரசு அதிகாரிகள் கடுமை காட்டத்தொடங்கி உள்ளனர்.

மாஸ்க் அதிகரிப்பு
சென்னை, கோவை மட்டுமல்ல, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலுமே சோதனைகள் தீவிரமாக கடைபிடிக்கப்படுகின்றன. மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்து அவர்களே மாஸ்க் போடத்தொடங்கி உள்ளனர். கட்டுப்பாடுகளை கடைபிடிக்காவிட்டால் கடைகளுக்கு அபராதம் விதிப்பது, மக்களை எச்சரிப்பது, தடுப்பூசியை தீவிரமாக்குவது என மிகவும் தீவிரமாக இறங்கி உள்ளது அரசு இயந்திரம். சென்னை, கோவையில் மட்டும் கொரோனா அதிகரித்து உள்ளதால் அங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மற்ற பகுதிகளில் அதிகரிக்கும் நிலை வந்தால் அங்கும் கட்டுப்பாடுகள் போடப்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

கொரோனா நிலவரம்
தற்போதைய நிலையில் தமிழகத்தில் செவ்வாய்கிழமை நிலவரப்படி புதிதாக மேலும் 1908 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2047 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 29 பேர் உயிரிழந்துள்ளனர். செவ்வாய்கிழமை மட்டும் 1,45,585 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது வரை 25,65,452 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 25,11,076 பேர் குணமடைந்துள்ளனர். 34,159 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் புதிதாக 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications