அரசு ஊழியர்கள் ரூ.25 ,000 வரையிலான பரிசுகளை வாங்கிக் கொள்ளலாம்… தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: அரசு ஊழியர்கள் 25 ஆயிரம் ரூபாய் வரையிலான பரிசுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
திருமணம்,பிறந்த நாள், வீடு குடிபுகுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் போதும் அரசு ஊழியர்கள் தங்களின் உறவினர்கள் நண்பர்கள் ஒருவரிடமிருந்து பரிசு பெறுவதற்கு விதிமுறைகள் உள்ளன .
அதன்படி ஏற்கனவே இது போன்ற நிகழ்ச்சிகளில் அரசு ஊழியர்கள் ரூ.5000 வரையே பரிசு பெறலாம் என்று இருந்தது. தற்போது 25 ஆயிரம் ரூபாய் வரையிலான பரிசுப் பொருட்களை பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொள்ளாச்சி.. திருநாவுக்கரசுக்காக களமிறங்கிய தாய் லதா.. இங்கதான் இருக்குது பிரச்சினை!
இதுதவிர அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கும் அல்லது புதிய வீட்டை வாங்குவதற்கு உறவினர்கள் அல்லது நண்பர்களிடம் வட்டியில்லாமல் 5 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம் எனவும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது .
தமிழக அரசின் இந்த நடவடிக்கை வித்திடும் என்று சில நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் . அதேவேளையில் பரிசு பொருட்கள் பெறுவது குறித்து யாரும் பெரிதாக கணக்கில் கொள்வதில்லை என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.