Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையின் பல இடங்களில் கொட்டி தீர்த்த கனமழை.. மறுபடியும் முதலில் இருந்தா.. மக்கள் அச்சம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்களிலும், டெல்டா, கொங்கு மண்டல பகுதிகளிலும் பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது.

அதுவும் கடந்த மாதம் சென்னையில் பேய்மழை கொட்டி தீர்த்தது. சென்னையின் நகர், புறநகர் என அனைத்து இடங்களிலும் பாரபட்சமின்றி பலத்த கன மழை பெய்தது. சென்னையில் எங்கு திரும்பினாலும் வெள்ளகாடாக காட்சியளித்தது.

Heavy rains lashed many places in Chennai

சென்னையின் பல இடங்களில் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்தது. சில பகுதிகளில் வீடுகளின் மாடி வரை வெள்ளநீர் தேங்கியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மாநில போலீசார், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டனர் . இதனால் பல நாட்களுக்கு சாலை போக்குவரத்து, ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

அப்போது பெய்த மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து சென்னை மக்கள் இப்போதுதான் மீண்டுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் இன்று மாலை பலத்த மழை கொட்டியது. சென்னையில் ராயப்பேட்டை, மயிலாப்பூர், அண்ணாசாலை, மெரினா உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியது.

Recommended Video

    சென்னை: பைக்குடன் கூவத்தில் அடித்து செல்லப்பட்ட இளைஞர்… திருமணம் நடைபெற இருந்த நிலையில் சோகம்!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+