பிடிங்க, 20 சீட்தான்.. அதிமுக சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்ட பாஜக.. என்ன காரணம் தெரியுமா?
சென்னை: 35 தொகுதிகள் வரை கேட்ட பாஜகவுக்கு, 20 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கியுள்ளது அதிமுக.
லோக்சபா தேர்தல் முதல் நட்பில் இருக்கக்கூடிய தோழமைக் கட்சி.. மத்தியில் முழு பெரும்பான்மையுடன் ஆட்சி செய்யும் கட்சி.. என இத்தனை இருந்தாலும், பாஜக கேட்டதை விட கிட்டத்தட்ட பாதி தொகுதிகளைத்தான் வழங்கியுள்ளது அதிமுக.
கடந்த லோக்சபா தேர்தலின்போது பாஜக பெரிதாக எதிர்பார்த்தது. ஆனால் கிடைத்தது 5 தொகுதிகள்தான்.

இரவோடு அறிவிப்பு
இந்த நிலையில் 20 தொகுதிகளுக்கு பாஜக எப்படி ஒப்புக் கொண்டது என்பது பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. முதலில்.. அவசரமாக நேற்று நள்ளிரவு நேரத்தில் தொகுதி பங்கீடு அறிவிப்பு வெளியாக காரணம் என்ன என்பது பற்றி பார்க்கலாம். கடந்த முறை அமித் ஷா, தமிழகம் வந்தபோது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை நேரில் சந்தித்து இட ஒதுக்கீடு பற்றிய ஆலோசனை நடத்தியிருந்தார். ஆனால் முடிவு எட்டப்படவில்லை.

அமித் ஷா வருகை
இந்த நிலையில் நாளை 7ம் தேதி நாகர்கோவிலுக்கு அமித்ஷா வருகை தர உள்ளார். இதற்குள்ளாக கூட்டணியை இறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, கன்னியாகுமரி தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.. இந்த செய்திகள் வெளியான பிறகு அமித்ஷா பிரச்சாரம் செய்தால் சிறப்பாக இருக்கும் என்பது பாஜக எண்ணம். எனவேதான் நேற்று இரவோடு இரவாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் அதிமுக வலியுறுத்தல்படி 20 தொகுதிகளுக்கு பாஜக பணிந்துள்ளது.

விரும்பிய தொகுதிகள்தான் முக்கியம்
20 தொகுதிகளுக்கு பாஜக ஒப்புக்கொள்ள முக்கிய காரணம். அதில் 10 தொகுதிகள் தாங்கள் கேட்கக்கூடிய தொகுதிகளாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை தான். குறிப்பாக, கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் வெற்றி வாய்ப்பு உள்ள 10 தொகுதிகளை பாஜக தனது லிஸ்டில் வைத்துள்ளது. கூடுதல் தொகுதிகள் வாங்கிவிட்டு, வெற்றி வாய்ப்பு இல்லாத தொகுதிகளில் போட்டியிடுவதைவிட தங்களுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருதும் தொகுதிகளில் போட்டியிடுவதற்காக, குறைந்த தொகுதிகளை வாங்கிக் கொள்வது நல்லது என முடிவுக்கு அந்த கட்சி வந்துள்ளது.

முக்கிய வேட்பாளர்கள்
பாஜக மனதில் வைத்துள்ள 10 தொகுதிகளில் தங்கள் கட்சியின் முக்கிய பிரமுகர்களை வேட்பாளராக களமிறக்க உள்ளது. அதில் கணிசமாக வெற்றி பெற்று விட்டால், தமிழக சட்டசபையில் கால் வைத்து விடலாம். அதுவே இப்போதைக்கு போதுமானது என்பது திட்டமாக இருப்பதாகக் கூறுகிறார்கள்.

கூட்டணியில் மகிழ்ச்சி
பாமகவை விட கூடுதல் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தால் அந்த கட்சிக்கு அதிருப்தி ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருந்தது. இப்போது அதுவும் இல்லை. அதிமுக நிர்வாகிகளும், பாஜகவுக்கு குறைந்த சீட் கொடுக்கப்பட்டதால் அதிக தொகுதிகளில் இரட்டைஇலை களம் காண போகிறது என்று உற்சாகத்தோடு வேலை பார்ப்பவர்கள். பாட்டாளி மக்கள் கட்சியினரும் உற்சாகத்தோடு வேலை பார்ப்பார்கள். கூட்டணிக்குள் ஒருங்கிணைப்பை இருந்தால் பாதி வெற்றி கிடைத்துவிடும் என்று பாஜக நினைக்கிறது. எனவேதான் 20 தொகுதிகள் என்றாலும் இன்முகத்தோடு அவற்றை வாங்கிக்கொண்டு முக்கிய தொகுதிகளில் களம் இறங்க காத்துக்கொண்டிருக்கிறது பாஜக.
-
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
லீமா ரோஸ் எனும் விஷ விதை.. பாஜக கண்ணை காட்டுனா போதும்! அதிமுக அவர் கையில்.. குண்டை போட்ட அதிமுக மாஜி -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு செட் ஆகாது.. கோவையில் 1 தொகுதியை ஒதுக்குங்க.. அண்ணாமலை பிடிவாதம்! -
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
எடப்பாடி முதல்வராக கூடாது.. ஓ.எஸ்.மணியன் டார்கெட் அதுதான்.. அதிமுக நிர்வாகியின் பகீர் குற்றச்சாட்டு! -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
இறுதியான பாஜக வேட்பாளர்கள் பட்டியல்.. பியூஷ் கோயல் ஆலோசனையில் நடந்தது என்ன? அண்ணாமலைக்கு வாய்ப்பு? -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு












Click it and Unblock the Notifications