Madras Day: மெட்ராஸ் பாஷை உருவானது எப்படி தெரியுமா.. ஷோக்கா பேசி பிகிலு வாங்கிட்டாங்கப்பா நடிகர்கள்!
சென்னை: மெட்ராஸ் டே கொண்டாடப்படும் இந்த நேரத்தில், "மெட்ராஸ் பாஷை" அல்லது "சென்னை பாஷை" சொல்லாடலை யாரும் எளிதாக கடந்து போய்விட முடியாது.
Recommended Video
இன்னா..ப்பா, குந்துப்பா.. நாஷ்டா துன்னியா.. ரொம்ப பேஜாரா கீதுப்பா.. இப்படி யாராவது உங்களிடம் பேச்சுக் கொடுத்தால், முகம் சுளிப்பவரா நீங்கள். தேவையில்லை. இந்த பாஷையின் பின்னணியில் பெரும் வரலாறும், இலங்கிய செழுமையும் கூட உள்ளது.
சென்னையில் மட்டும் பிரத்தியேகமாக பயன்படுத்தப்படும் இதுபோன்ற வார்த்தைகளின் மூலம் எது? பின்னர் நடிகர்கள் மூலம் எப்படி அது தமிழகம் முழுக்க பரவியது. வாங்க பார்க்கலாம்:

மெட்ராஸ் பாஷை பிறந்த கதை
வங்காள விரிகுடா கரையோரம் அமைந்த சென்னையில் கால் பதிக்காத வெளிநாட்டுக்காரர்களே இல்லை என்று சொல்லலாம். இங்கிலாந்து ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்பே, அரேபியர்கள், சீனர்கள் என பல நாட்டுக்காரர்களும், சென்னை மண்ணை தொட்டுச் செல்லாமல் போனதில்லை. இப்போது சென்னையில் பேசப்படும் சில வார்த்தைகள் இந்த குறிப்பிட்ட நாட்டுக்காரர்களிடம் இருந்து பெறப்பட்டதுதான். இவற்றைத்தவிர மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்படுவதற்கு முன்பாக அனைத்து மொழிக்காரர்களும் சென்னையில் வசித்ததால், அவர்களின் வார்த்தைகளும் கலந்து சென்னை தமிழ் என்றாகிவிட்டது.

இலக்கிய செழுமை மிக்க குந்து
தற்போது பேசப்படும் சென்னை தமிழ், தெலுங்கு, இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளின் ஆதிக்கம் அதிகம் கொண்டது. சில வார்த்தைகள் சங்க இலக்கியத்தில் இருக்கிறது என்று சொன்னால் உங்களுக்கு ஆச்சரியம் ஏற்படும். உட்கார் என்பதைவிடவும் இலக்கிய வளமை கொண்ட சொல் குந்து என்பது. பாவேந்தர் பாரதிதாசன் கூட, காற்று குந்தி சென்றது.. மந்தி வந்து குந்தி.. என்று தனது கவிதைகளில் பயன்படுத்தியிருப்பார். வட கர்நாடகாவில் பயன்படுத்தப்படும் கன்னட சொற்களில் குந்து என்ற வார்த்தை இப்போதும், பயன்படுத்தப்படுகிறது.

பேஜார் சொல் பிறந்த கதை
"சென்னை கதை" என்ற நூலின் ஆசிரியர் பார்த்திபன் இதுபற்றி கூறுகையில், சென்னை பாஷை என்பது கொச்சை என்று கற்பிதம் செய்யப்பட்டு இருக்கிறது. உண்மை அப்படி இல்லை என்று சொல்கிறார். நாஸ்டா என்று சொல் உருது மொழியில் வந்தது. பேஜார் என்பதும் ஆங்கில மொழியில் இருந்து உருமாறி வந்த வார்த்தை. ஆங்கிலேயர்கள் கப்பலில் வந்து இறங்கும்போது கைரிக்ஷாக்காரர்கள் அவர்களை எங்கள் வண்டியில் வந்து ஏறுங்கள் என்று வலிந்து இழுக்கும்போது , ஆங்கிலேயர்கள் அவர்களை தவிர்க்க என்னை விடுங்கள் என்று கூற, அந்த ஆங்கில சொல் புழக்கத்தில் பேஜார் பண்ணாதே என மாறிவிட்டது, என்கிறார்.

நடிகர்களால் புகழ் பெற்றது
சென்னை பாஷையை தமிழகம் முழுக்க கொண்டு சென்ற பெருமை நடிகர்கள் பலருக்கு உண்டு. எம்ஆர் ராதா தொடங்கி, சந்திரபாபு, தேங்காய் சீனிவாசன், லூசு மோகன் போன்ற நடிகர்கள் முதல் கமல்ஹாசன் வரை பல நடிகர்கள் சென்னை பாஷை பேசி பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். இதனால் அந்த பாஷை பட்டி தொட்டி எங்கும் புகழ் பெறத் தொடங்கியது. அடையாளம் கண்டறியப்பட்டது.

சந்திரபாபு வசனங்கள்
நடிகர்களில் ஒரு சிலருக்கு இந்த பாஷை ரொம்பவே செட்டாகிப்போனது உண்டு.சபாஷ் மீனா படத்தில் "இன்னாடா இது பேஜாரா போச்சு.. இன்னாடி எப்பப் பார்த்தாலும் ராங் பன்ற நீ" என்பது போன்ற புகழ் பெற்ற வசனங்களை சந்திரபாபு பேசினார். இதற்கு கிடைத்த வரவேற்பால், அதிகமாக மெட்ராஸ் பாஷை பேசி நடிக்கவும் தொடங்கினார் சந்திரபாபு. ரிக்ஷாக்காரான் திரைப்படத்தில் ரிக்ஷா ஓட்டுபவாரகவரும் தேங்காய் சீனிவாசன், ஆரம்பத்திலிருந்து கடைசிவரை மெட்ராஸ் பாஷை பேசி கலக்கியிருப்பார். மெட்ராஸ் பாஷையைப் பேசுவதில் சந்திரபாபுக்கு அடுத்தபடியாக அதிகமாக பாராட்டுப் பெற்றவர் தேங்காய் சீனிவாசன்.

வாழ்ந்த லூஸ் மோகன்
மற்ற நடிகர்களாவது பிற ஸ்டைல் வார்த்தைகளையும் பேசி நடித்திருப்பார்கள். ஆனால், லூஸ் மோகன் என்றாலே, மெட்ராஸ் பாஷைதான் ரசிகர்களுக்கு நினைவுக்கு வரும் அளவுக்கு, மனிதர், மெட்ராஸ்காரராகவே வாழ்ந்திருப்பார். கண்ணை மூடிக்கொண்டே அவர் மெட்ராஸ் பாஷையை உச்சரிப்பதை பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கும்.

நடிகர் சோ
ஆனால் இவர்களுக்கெல்லாம் குரு என்றால், அது நடிகர் சோ ராமசாமிதான். ரொம்ப இயல்பாக சென்னை பாஷை பேசக்கூடியவர் சோ. பொம்மலாட்டம் திரைப்படத்தில் சோ மற்றும் மனோரமா இருவரும் மெட்ராஸ் பாஷை பேசியடித்த லூட்டி கிச்சுகிச்சு ரகம். அதிலும், வா வாத்யாரே ஊட்டாண்ட நீ வராங்காட்டி நான் உடமாட்டேன்.. ஜாம்பஜார் ஜக்கு, நான் சைதாப்பேட்டை கொக்கு என்று மனோரமா பாடிய பாடல் பட்டிதொட்டியெங்கும் புகழ் பெற்றது.

மனோரமா பாட்டை மறக்க முடியுமா
மே தினம் திரைப்படத்தில் நடிகை மனோரமா பக்கா மெட்ராஸ்காரம்மாவாக பொருந்தி போயிருப்பார். மெட்ராசை சுத்திப் பார்க்கப்போறேன் என்ற பாடலை மனோரமாவே பாடியிருப்பார். இன்று வரை மெட்ராஸ் என்ற வார்த்தையை யாராவது காதில் கேட்டாலே, மனோரமா பாடிய இந்த பாடல்தான் உடனே வாயில் முனுமுனுக்கும். அப்படி மெட்ராசோடு ஒன்றிப்போன ஒரு பாடல் இது. நடிகர்கள் மட்டுமல்ல, நடிகையும் மெட்ராஸ் பாஷையில் கலக்க முடியும் என்று நிரூபித்தார் இந்த சகலகலாவள்ளி ஆச்சி.

கமல்ஹாசனின் வசனங்கள்
பெரும்பாலும் ரிக்ஷாக்காரர் கதாப்பாத்திரத்தில் வருவதாலோ என்னவோ ஜனகராஜுக்கும் இந்த லிஸ்டில் இடம் உண்டு. கமல்ஹாசன் எந்த ஊர் பாஷையையும் பேசி அசத்தக் கூடியவர். சதி லீலாவதி படத்தில் கோவை பாஷை பேசி கலக்கிய கமல், பல படங்களில் மெட்ராஸ் பாஷை பேசியிருந்தாலும், பம்மல் சுந்தரம், வசூல்ராஜா எம்பிபிஎஸ் போன்ற படங்கள் என்றதுமே கமல்ஹாசனின் மெட்ராஸ் பாஷைதான் நினைவிற்கு வரும்.

எம்.எஸ்.பாஸ்கர்
மாயாவி மாரீசன் என்று ஒரு தொலைக்காட்சி தொடர் வந்ததல்லவா, அதில் ஒரு சிறு பாத்திரத்தில் நடித்திருப்பார் எம்.எஸ்.பாஸ்கர். வில்லனுக்கு நண்பனைப் போன்ற ஒரு பாத்திரம் அது. அதில் மெட்ராஸ் பாஷை பேசி நடித்தார் எம்எஸ் பாஸ்கர். பக்காவாக பொருந்திப்போக பல படங்களில் மெட்ராஸ் பாஷையை திறம்பட பேசியிருப்பார். தசாவதாரம் திரைப்படத்தில், சீரியசான காட்சிகளுக்கு நடுவே, அமெரிக்க கமல்ஹாசன் கதாப்பாத்திரத்திற்கு ஜீப் ஓட்டுபவராக மெட்ராஸ் பாஷை பேசி கலகலக்க வைத்திருப்பார் எம்எஸ் பாஸ்கர். தெலுங்கு படங்களை தமிழில் டப் செய்யும்போது, வில்லன்களுக்கு டப்பிங் குரலில் மெட்ராஸ் பாஷை பேசி அசத்தியிருப்பார் ஒய்.ஜி.மகேந்திரன். சார்பட்டா பரம்பரை படத்தில் அதிகம் மீம்ஸ் போடப்பட்ட வாத்யாரே என்ற வார்த்தையும் கூட மெட்ராஸ் பாஷையின் ஸ்பெஷல்தானே. எம்ஜிஆருக்கு சிறப்பு செய்யும் பட்டத்தில் வாத்தியார் ஒன்று. அதுவும் மெட்ராஸ் பாஷையால் நகரும் படம்.

புது பரிணாமத்தில் படங்கள்
இப்போது மெட்ராஸ் பாஷை வேறு பரிணாமம் பெற்று பயணிக்கிறது. பொல்லாதவன் திரைப்படத்தில் கிஷோர் பேசிய மெட்ராஸ் பாஷை இதற்கு ஒரு உதாரணம். எந்த வகையிலும் துருத்தி நிற்காமல் சென்னை மக்களோடு பயணிப்பதை போன்ற ஒரு, சொல்லாடலை பயன்படுத்தியிருப்பார். பிகிலு படத்தில் விஜய் மெட்ராஸ் பாஷை பேச நல்லாவே முயன்றிருப்பார். சந்தானம், யோகிபாபு போன்றவர்கள் தங்களுடைய படங்களில் இயல்பாக மெட்ராஸ் பாஷை பயன்படுத்தி, நகைச்சுவை காட்சிகளுக்கு மெருகேற்றிவருகிறார்கள். மெட்ராஸ் திரைப்படத்தில் கார்த்தி கூட சூப்பராக மெட்ராஸ் பாஷையை உச்சரித்து அசத்தியிருப்பார். சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் மெட்ராஸ் பாஷை அவ்வளவு இயல்பாக பயன்படுத்தப்பட்டிருக்கும். அங்கேயே வாழ்வது போல உங்களை படத்திற்குள் அழைத்துச் செல்லும்.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா












Click it and Unblock the Notifications