அன்புக்கு நன்றி...நலமாக இருக்கிறேன்..கவலை வேண்டாம் - பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
நான் நலமாக இருக்கிறேன். எனது உடல்நிலை தேறி வருகிறது. அடுத்த சில நாட்களில் முழுமையாக நலம் பெற்று விடுவேன் என்று டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை: நான் நலமாக இருக்கிறேன் என்று கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். எனது உடல்நிலை தேறி வருகிறது. அடுத்த சில நாட்களில் முழுமையாக நலம் பெற்று விடுவேன்.
பாட்டாளி சொந்தங்கள் உள்ளிட்ட அனைவரும் இது குறித்து கவலை கொள்ள வேண்டாம் என்றும் பதிவிட்டுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், 82 தனது மனைவி சரஸ்வதி அம்மாளுடன் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் வசித்து வருகிறார்.
டாக்டர் ராமதாஸ் கடந்த சில வாரங்களாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடந்த கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தொண்டர்களை சந்தித்து வந்தார்.
“அய்யா ராமதாஸ் விரைந்து நலம்பெறனும்..” கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
ராமதாஸ்க்கு உடல் நலம் பாதிப்பு
இந்த நிலையில் நேற்று முன்தினம் ராமதாசுக்கு திடீரென தொண்டைவலி ஏற்பட்டது. இதையடுத்து சோர்வுடன் காணப்பட்ட ராமதாஸ் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். கொரோனா தொற்று பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
தனிமைப்படுத்திக்கொண்ட ராமதாஸ்
அதைத்தொடர்ந்து ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்ட டாக்டர் ராமதாஸ் ஏற்கனவே பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார்.
நலமடைய வாழ்த்து
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள டாக்டர் ராமதாஸ் விரைவில் குணமடைய வேண்டும் என்று பலரும் வாழ்த்தி வருகின்றனர். அவரது ஆதரவாளர்கள் பலரும் நலம் விசாரித்தனர். இந்த நிலையில் தனது நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் ட்விட்டரில் நன்றி கூறியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.
ராமதாஸ் ட்வீட்
கொரோனா தொற்றால் நான் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து தகவல் அறிந்த ஏராளமானோர் அன்பின் மிகுதியால் என்னிடம் நலம் விசாரிப்பதற்காக தொலைபேசியில் தொடர்பு கொள்கின்றனர். அவர்களிடம் பேச முடியாதது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது!
Recommended Video
நலமாக இருக்கிறேன்
நான் நலமாக இருக்கிறேன். எனது உடல்நிலை தேறி வருகிறது. அடுத்த சில நாட்களில் முழுமையாக நலம் பெற்று விடுவேன். எனவே, பாட்டாளி சொந்தங்கள் உள்ளிட்ட அனைவரும் இது குறித்து கவலை கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ்.