கமல்ஹாசனை வன்மையாக கண்டிக்கிறேன்.. காங். தலைவர் கே.எஸ் அழகிரி பலே பல்டி!
கமல்ஹாசனை வன்மையாக கண்டிக்கிறேன்.. காங். தலைவர் கே.எஸ் அழகிரி பலே பல்டி!
சென்னை: திமுகவை விமர்சித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசனை வன்மையாக கண்டிக்கிறேன் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி பேட்டியளித்துள்ளார். நேற்று அவர் கமலுக்கு அழைப்பு விடுத்து விட்டு இன்று பலே பல்டி அடித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தமிழகத்தில் லோக் சபா தேர்தலின் போது 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட போவதாக தெரிவித்துள்ளார். காங்கிரஸ், பாஜக ஆகியவற்றின் கூட்டணியில் சேர மாட்டேன் என்று கூறினார். இந்த பேட்டியில், கமல்ஹாசன் திமுக அதிமுக ஆகிய கட்சிகளையும் விமர்சித்து இருந்தார்.
இந்த நிலையில் நேற்று பேட்டியளித்த, புதிதாக தேர்வாகி இருக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி, காங்கிரஸ் - திமுக கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் சேர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

பேட்டி
இது திமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திமுக தலைவர்கள் அதிருப்தி அடைந்தனர். இது விமர்னத்துக்குள்ளானது. காங்கிரஸ் தலைமைக்கும் இதுகுறித்து தகவல் சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்த சர்ச்சைகள் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி விளக்கமளித்துள்ளார்.

என்ன கூறினார்
கே.எஸ் அழகிரி இதுதொடர்பாக அளித்துள்ள பேட்டியில், பாஜக, அதிமுக எதிர்ப்பு வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காகத் தான் கூட்டணியில் சேர கமலுக்கு அழைப்பு விடுத்தேன். ஆனால் கூட்டணிக்கு அழைப்பு விடுக்கும் போது, திமுகவை கமல் விமர்சனம் செய்தது என் கவனத்திற்கு வரவில்லை.

திமுக
திமுகவை கமல்ஹாசன் விமர்சித்தது இப்போதுதான் கவனத்திற்கு வந்தது. திமுகவை கமல்ஹாசன் தேவையில்லாமல் விமர்சித்துள்ளார். திமுகவை விமர்சித்த கமல்ஹாசனை வன்மையாக கண்டிக்கிறேன்.

முடிவு
எங்கள் கூட்டணி திமுக தலைமையிலான கூட்டணி. கூட்டணியில் இடம்பெற வேண்டிய கட்சிகளை திமுக - காங்கிரஸ் சேர்ந்து முடிவு செய்யும். திமுக பற்றி பேசியது தெரியாமல் கமலை கூட்டணிக்கு அழைத்துவிட்டேன்.

கண்டிப்பாக இல்லை
திமுக மீதான கமலின் விமர்சனம் பாஜகவிற்கு உதவும், ஆனால் அவர் ஏற்றுக்கொண்டதாகக் கூறப்பட்ட எந்த கொள்கைகளுக்கும் உதவாது, என்று கூறியுள்ளார். இதன் மூலம் கமல்ஹாசன் கண்டிப்பாக காங்கிரஸ் கூட்டணியில் இணைய மாட்டார் என்பது உறுதியாகி இருக்கிறது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications