மருத்துவர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை... அவசரச் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
சென்னை: மருத்துவர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெறக்கூடிய வகையில் அவசர சட்டத்தை கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கொரோனாவுக்கு எதிரான போரில் நாடு முழுவதும் மருத்துவர்கள் தங்கள் இன்னுயிரை கூட துச்சமாக கருதி சேவையாற்றி வரும் நிலையில் ஒரு சிலர் அவர்கள் மீது வெறுப்பை உமிழும் நிகழ்வுகள் சமீபத்தில் நடைபெற்றன.
இந்த சூழலில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை பாதுகாக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது மத்திய அரசு.

நடவடிக்கை பாயும்
கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினால் மத்திய அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது என்றும் கடும் நடவடிக்கை பாயும் எனவும் எச்சரித்துள்ளார் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர். மத்திய அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்ட பின்பு அவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார். நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் மீதான தாக்குதலும் வெறுப்பும் அதிகரித்து வரும் சூழலில் அவர்களை பாதுகாக்கும் பொருட்டு அவசரச் சட்டம் கொண்டு வரவுள்ளதாக தெரிவித்தார்.

ஜனாதிபதி ஒப்புதல்
மருத்துவர்களை பாதுகாக்கும் வகையில் அவசரச்சட்டம் கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துவிட்டதால், அது விரைவில் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒப்புதல் கிடைத்தவுடன் நடைமுறைக்கு வரும் என பிரகாஷ் ஜவடேகர் கூறினார். இந்த சட்டம் அமலுக்கு வந்தால் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் நிகழ்வுகள் வெகுவாக குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் தண்டனை மற்றும் அபராதம் கடுமையாக இருப்பதால் தாக்குதல்கள் குறையக்கூடும்.

வெறுப்பு உமிழ்வு
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது வெறுப்பை உமிழும் நிகழ்வுகள் நாடு தழுவிய அளவில் நடைபெறுகின்றன. இது தொடர்பான புகார்களை கவனமாக குறித்துக்கொண்ட மத்திய அரசு அவசரச்சட்டத்தை கொண்டு வரும் அதிரடி முடிவை இன்று எடுத்துள்ளது. இதனிடையே மருத்துவ பணியாளர்கள் மீதான தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது என அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

ஒரு மாதத்தில் விசாரணை
மருத்துவர்களை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்படும் அவசரச்சட்டத்தின் கீழ் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டால் விசாரணை ஒரு மாதத்திற்குள் முடிவடையும். மேலும் ஜாமீனில் வெளிவரமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் மருத்துவர்கள் சேவையாற்றி வரும் நிலையில் அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளது மத்திய அரசு.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications