மருத்துவர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை... அவசரச் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
சென்னை: மருத்துவர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெறக்கூடிய வகையில் அவசர சட்டத்தை கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கொரோனாவுக்கு எதிரான போரில் நாடு முழுவதும் மருத்துவர்கள் தங்கள் இன்னுயிரை கூட துச்சமாக கருதி சேவையாற்றி வரும் நிலையில் ஒரு சிலர் அவர்கள் மீது வெறுப்பை உமிழும் நிகழ்வுகள் சமீபத்தில் நடைபெற்றன.
இந்த சூழலில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை பாதுகாக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது மத்திய அரசு.

நடவடிக்கை பாயும்
கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினால் மத்திய அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது என்றும் கடும் நடவடிக்கை பாயும் எனவும் எச்சரித்துள்ளார் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர். மத்திய அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்ட பின்பு அவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார். நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் மீதான தாக்குதலும் வெறுப்பும் அதிகரித்து வரும் சூழலில் அவர்களை பாதுகாக்கும் பொருட்டு அவசரச் சட்டம் கொண்டு வரவுள்ளதாக தெரிவித்தார்.

ஜனாதிபதி ஒப்புதல்
மருத்துவர்களை பாதுகாக்கும் வகையில் அவசரச்சட்டம் கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துவிட்டதால், அது விரைவில் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒப்புதல் கிடைத்தவுடன் நடைமுறைக்கு வரும் என பிரகாஷ் ஜவடேகர் கூறினார். இந்த சட்டம் அமலுக்கு வந்தால் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் நிகழ்வுகள் வெகுவாக குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் தண்டனை மற்றும் அபராதம் கடுமையாக இருப்பதால் தாக்குதல்கள் குறையக்கூடும்.

வெறுப்பு உமிழ்வு
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது வெறுப்பை உமிழும் நிகழ்வுகள் நாடு தழுவிய அளவில் நடைபெறுகின்றன. இது தொடர்பான புகார்களை கவனமாக குறித்துக்கொண்ட மத்திய அரசு அவசரச்சட்டத்தை கொண்டு வரும் அதிரடி முடிவை இன்று எடுத்துள்ளது. இதனிடையே மருத்துவ பணியாளர்கள் மீதான தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது என அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

ஒரு மாதத்தில் விசாரணை
மருத்துவர்களை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்படும் அவசரச்சட்டத்தின் கீழ் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டால் விசாரணை ஒரு மாதத்திற்குள் முடிவடையும். மேலும் ஜாமீனில் வெளிவரமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் மருத்துவர்கள் சேவையாற்றி வரும் நிலையில் அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளது மத்திய அரசு.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications