கொரோனா: 2 நாட்களில் ஹாஸ்டலை காலி செய்யச் சொல்லும் சென்னை ஐஐடி - தவிக்கும் மாணவர்கள்
விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் இரண்டு நாட்களுக்குள் விடுதிகளை காலி செய்ய வேண்டும் என்று சென்னை ஐஐடி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதால் வெளி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் தவித்து வருகின்றனர்.
சென்னை: கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் அனைவரும் இரண்டு நாட்களுக்குள் அறைகளை காலி செய்ய வேண்டும் என்று சென்னை ஐஐடி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதால் மாணவர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். விடுதிகளில் தங்கியிருந்த பேராசிரியர்கள், மாணவர்கள் சிலருக்கு கொரோனா தொற்று பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்தே அனைவரும் விடுதிகளை விட்டு இரண்டு நாட்களில் காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மார்ச் முதல் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க கடந்த 3 மாதகாலமாக நாடு முழுவதும் ஊராடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு ரயில், பேருந்துகள் மூலமாக சென்று விட்டனர். பலர் கால்நடையாக பயணித்து விட்டனர்.

கல்லூரி, பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் மூடப்பட்டு விட்டன. அண்ணா பல்கலைக்கழகம், சென்னை ஐஐடி விடுதிகளிலும் பல கல்வி நிறுவனங்களில் தங்கியிருப்பவர்களும் விடுதிகளிலேயே பாதுகாப்பாக தங்கி விட்டனர்.
சென்னை ஐ.ஐ.டி.யைப் பொறுத்தவரை, ஊரடங்கு காலத்துக்கு முன் விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்கள் சூழல் சரியாகும் வரை தொடர்ந்து தங்கியிருக்க ஐ.ஐ.டி. நிர்வாகம் அனுமதி வழங்கியிருந்தது. இந்த சூழ்நிலையில்தான் ஐஐடி விடுதிகளில் தங்கி உள்ள மாணவர்கள் அடுத்த இரு தினங்களுக்குள்ளாக விடுதிகளை காலி செய்ய வேண்டும் என்றும், விடுதிகளை விட்டு மாணவர்கள் வெளியேறாவிட்டால், அவர்கள் வெளியேற்றப்படுவர் என்றும் ஐ.ஐ.டி. நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்த அறிவிப்பு
மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விடுதிகளில் தங்கியிருந்த பேராசிரியர்கள், மாணவர்கள் சிலருக்கு கொரோனா தொற்று பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்தே அனைவரும் விடுதிகளை விட்டு இரண்டு நாட்களில் காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீர் தொடங்கி, உத்தரபிரதேசம், குஜராத், மேகாலயா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் சென்னை ஐஐடியில் தங்கி படித்து வருகின்றனர். இப்போது ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு விட்டது. இந்த சூழ்நிலையில் விடுதிகளை காலி செய்ய உத்தரவிட்டுள்ளதால் சொந்த ஊருக்கு போக முடியாத நிலையில் உள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பான ஏற்பாடுகளை ஐஐடி நிர்வாகம் செய்ய வேண்டும் என்று மாணவர்களும் பேராசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ -
என்னடா இது அதிமுகவுக்கு வந்த சோதனை.. காலி நாற்காலிகளுடன் கூட்டம்.. நொந்துபோன கௌதமி












Click it and Unblock the Notifications