அந்தமான் கடலில் ஏப்.7ல் காற்றழுத்த தாழ்வு பகுதி! 2 நாள் மீனவர்களுக்கு எச்சரிக்கை!மழைக்கு வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தெற்கு அந்தமான் கடல், அதனையொட்டிய வங்கக்கடலில் ஏப்ரல் 6ல் மேலடுக்கு சுழற்சி உருவாகி 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி மாறலாம் என்பதால் 2 நாட்களும் அந்தமான் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதவிர தமிழகத்தின் சில மாவட்டங்களுக்கு மழை வாய்ப்புள்ளதாகவும் அந்த மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் கூட மதிய வெயில் மண்டையை பிளந்தது.

இதனால் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அக்னி நட்சத்திரமே இன்னும் வரவில்லை. அதற்குள் இப்படியா சூரியன் சுட்டெரிப்பது என எரிச்சலடைகின்றனர்.

காற்றழுத்த தாழ்வு பகுதி

காற்றழுத்த தாழ்வு பகுதி

மேலும் கோடை மழை கொட்டி தீர்க்காத என பேசி வருகின்றனர். இந்நிலையில் தான் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் மழைக்கு வாய்ப்பு இருக்கலாம் என கருதப்படுகிறது. இதுகுறித்து இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல் வருமாறு:

மீனவர்களுக்கு எச்சரிக்கை

மீனவர்களுக்கு எச்சரிக்கை

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டி வருகிறது. இந்நிலையில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தெற்கு அந்தமான் கடல், அதனையொட்டிய வங்கக்கடலில் ஏப்ரல் 6ல் மேலடுக்கு சுழற்சி உருவாகும். அதன்பின் 24 மணிநேரத்தில் அதாவது ஏப்ரல் 7ல் தென்கிழக்கு வங்ககடலில் ஏப்ரல் 7ல் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதனால் அந்தமான் பகுதியில் 60 கிலோமீட்டர் தூரம் வரை பலத்த காற்று வீசக்கூடும். எனவே ஏப்ரல் 6ல் தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கும், 7ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல், அதனையொட்டிய அந்தமான் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மழை எங்கெங்கு

மழை எங்கெங்கு

மேலும் புதிதாக உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மழை பெய்யும் இடங்கள் குறித்த விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை. இதற்கிடையே, தமிழக பகுதிகளில் நிலவி வரும் கீழடுக்கு சுழற்சி காரணமாக சில இடங்களில் மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. மேலும் கீழடுக்கு சுழற்சி காற்று விசை காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு உள் தமிழ்நாடு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையைம் தெரிவித்துள்ளது.

தஞ்சையில் மழை

தஞ்சையில் மழை

தமிழகத்தில் நேற்று சில இடங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக தேவக்கோட்டையி்ல 8 சென்டிமீட்டர், அம்பாசமுத்திரத்தில் 6 சென்டிமீட்டர், பேச்சிபாறை, தஞ்சாவூரில் தலா 4 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதனால் அந்த பகுதிகளில் கொஞ்சம் தனித்து இருந்தது. இதனால் மக்கள் கொஞ்சம் நிம்மதியடைந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+