”சில மாநிலங்களில் 3ம் மொழியாக தமிழ்.. இந்திய நாகரீக வளர்ச்சியின் அடையாளம்” ஆளுநர் ஆர்.என்.ரவி!
சென்னை: நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளிகளிலும் 3ம் மொழியாக தமிழை அறிமுகம் செய்ய ஆர்வமாக இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை தரமணியில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த நிறுவனத்தில் உள்ள தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்களுடன் ஆளுநர் கலந்துரையாடினார்.
இதனைத் தொடர்ந்து நிறுவனத்தின் இயக்குநரும், பேராசிரியருமான பி.சந்திரசேகரன், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் மேற்கொண்டு வரும் பணிகள், எதிர்கால திட்டங்கள் குறித்து காணொலி காட்சி வாயிலாக ஆளுநருக்கு விளக்கினார்.

செம்மொழி தமிழாய்வு நிறுவனம்
இதன் பின்னர் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் பல்வேறு வசதிகள், கட்டமைப்புகளை ஆளுநர் பார்வையிட்டார். இதனைத்தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி கூறுகையில், இந்தியாவின் அடையாளத்தை உருவாக்குவதில் தமிழின் பங்களிப்பு முக்கியமானது. தமிழ் மொழியின் வளம் சமூகத்தின் நாகரீக வளர்ச்சியின் பிரதிபலிப்பாகும்.

3ம் மொழியாக தமிழ்
இந்தியாவின் விரிவான மறுமலர்ச்சிக்கு, தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சார ஞானம் போன்றவற்றை, இந்தியர் அனைவரும் கற்கும் வகையில் தமிழகத்துக்கு வெளியிலும் தமிழை பரவ செய்திட வேண்டும். நாட்டின் சில மாநிலங்கள் தமிழ் மொழியை தங்களது பள்ளிகளில் 3ம் மொழியாக அறிமுகப்படுத்த ஆர்வமாக உள்ளன.

எளிய முறை கற்றல் தேவை
தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், தமிழ் அல்லாத மாணவர்களை ஈர்க்கக்கூடிய வகையில், எளிய முறை தமிழ் கற்றல் அணுகுமுறைகளை உருவாக்க வேண்டும். அவை ஆக்கப்பூர்வமாகவும், எளிதாகவும் தமிழ் அல்லாதவர்களை கவரும் வகையிலும் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மரக்கன்று நட்ட ஆளுநர்
இதைத்தொடர்ந்து, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன வளாகத்தில் ஆளுநர் மரக்கன்று நட்டார். இந்த நிகழ்வில் நிறுவனத்தின் துணை தலைவர் பேராசிரியர் சுந்தரமூர்த்தி, துணை வேந்தர் என்.பஞ்சநாதன், தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழக பேராசிரியர்கள், தமிழ் அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications