”சில மாநிலங்களில் 3ம் மொழியாக தமிழ்.. இந்திய நாகரீக வளர்ச்சியின் அடையாளம்” ஆளுநர் ஆர்.என்.ரவி!
சென்னை: நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளிகளிலும் 3ம் மொழியாக தமிழை அறிமுகம் செய்ய ஆர்வமாக இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை தரமணியில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த நிறுவனத்தில் உள்ள தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்களுடன் ஆளுநர் கலந்துரையாடினார்.
இதனைத் தொடர்ந்து நிறுவனத்தின் இயக்குநரும், பேராசிரியருமான பி.சந்திரசேகரன், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் மேற்கொண்டு வரும் பணிகள், எதிர்கால திட்டங்கள் குறித்து காணொலி காட்சி வாயிலாக ஆளுநருக்கு விளக்கினார்.

செம்மொழி தமிழாய்வு நிறுவனம்
இதன் பின்னர் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் பல்வேறு வசதிகள், கட்டமைப்புகளை ஆளுநர் பார்வையிட்டார். இதனைத்தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி கூறுகையில், இந்தியாவின் அடையாளத்தை உருவாக்குவதில் தமிழின் பங்களிப்பு முக்கியமானது. தமிழ் மொழியின் வளம் சமூகத்தின் நாகரீக வளர்ச்சியின் பிரதிபலிப்பாகும்.

3ம் மொழியாக தமிழ்
இந்தியாவின் விரிவான மறுமலர்ச்சிக்கு, தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சார ஞானம் போன்றவற்றை, இந்தியர் அனைவரும் கற்கும் வகையில் தமிழகத்துக்கு வெளியிலும் தமிழை பரவ செய்திட வேண்டும். நாட்டின் சில மாநிலங்கள் தமிழ் மொழியை தங்களது பள்ளிகளில் 3ம் மொழியாக அறிமுகப்படுத்த ஆர்வமாக உள்ளன.

எளிய முறை கற்றல் தேவை
தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், தமிழ் அல்லாத மாணவர்களை ஈர்க்கக்கூடிய வகையில், எளிய முறை தமிழ் கற்றல் அணுகுமுறைகளை உருவாக்க வேண்டும். அவை ஆக்கப்பூர்வமாகவும், எளிதாகவும் தமிழ் அல்லாதவர்களை கவரும் வகையிலும் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மரக்கன்று நட்ட ஆளுநர்
இதைத்தொடர்ந்து, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன வளாகத்தில் ஆளுநர் மரக்கன்று நட்டார். இந்த நிகழ்வில் நிறுவனத்தின் துணை தலைவர் பேராசிரியர் சுந்தரமூர்த்தி, துணை வேந்தர் என்.பஞ்சநாதன், தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழக பேராசிரியர்கள், தமிழ் அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு












Click it and Unblock the Notifications