Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பல வருட கோரிக்கை.. ஒரே கையெழுத்து.. மனம் குளிர்ந்த அரசு ஊழியர்கள்.. தமிழக அரசின் மாஸ்டர் ஸ்டிரோக்!

தமிழக அரசின் கீழ் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஓய்வு வயது 59 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசின் கீழ் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஓய்வு பெறும் வயது 59 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது. தமிழக அரசின் இந்த முடிவு பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

Recommended Video

    TN govt increases retirement age to 59 years

    தமிழகம் முழுக்க கொரோனா தடுப்பு பணிகளை அரசு தீவிரமாக செய்து வருகிறது. அதே சமயம் இன்னொரு பக்கம் நிர்வாக ரீதியாகவும் நிறைய முக்கியமான அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவித்தது தொடங்கி முதலீட்டாளர்களை ஈர்க்கும் அறிவிப்புகளை அரசு வெளியிட்டு வருகிறது.

    அந்த வகையில்தான் நேற்று தமிழ்நாடு அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 58-லிருந்து 59 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரி ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதும், பொதுத்துறை நிறுவன பணியாளர்களின் ஓய்வு வயதும் இனி 59 ஆகும்.

    பல வருட கோரிக்கை

    பல வருட கோரிக்கை

    தமிழக அரசின் இந்த முடிவு பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அரசு பொதுத்துறை ஊழியர்கள் பல வருடமாக வைத்து வந்த கோரிக்கை ஆகும் இது. அதேபோல் அரசு ஆசிரியர்களும் தங்களின் ஓய்வு வயதை உயர்த்தும்படி கோரிக்கை வைத்து இருந்தனர். இத்தனை நாள் கோரிக்கையை எந்த விதமான போராட்டமும் இன்றி மிக அமைதியாக தமிழக அரசு நிறைவேற்றி உள்ளது. யாரும் எதிர்பார்க்காத வகையில் சர்ப்ரைஸ் அறிவிப்பாக இது வெளியாகி உள்ளது.

    பணியாற்ற வாய்ப்புள்ளது

    பணியாற்ற வாய்ப்புள்ளது

    இதன் மூலம் அரசு பொதுத்துறை ஊழியர்கள், ஆசிரியர்கள் மேலும் ஒரு வருடம் வேலை பார்க்க முடியும். இதனால் அவர்களின் பொருளாதார தேவை பெரிய அளவில் ஈடுகட்டப்படும். தங்கள் குடும்பத்தை கவனிக்கவும், வீட்டில் விழாக்களை நடத்தவும் இந்த ஒரு வருட நீட்டிப்பு மேலும் உதவும். இந்த அறிவிப்பு பல ஆயிரம் ஊழியர்களின் வாழ்க்கையில் பெரிய வெளிச்சமாக பார்க்கப்படுகிறது. இதனால்தான் நேற்றில் இருந்தே இந்த அறிவிப்பை பலரும் வரவேற்று வருகிறார்கள்.

    பொருளாதார நிலை

    பொருளாதார நிலை

    முக்கியமாக கொரோனா காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் சரிந்துள்ளது. அதேபோல் தனியார் நிறுவனங்கள் இப்போதே பணி நீக்கத்தை தொடங்கிவிட்டது. அடுத்த சில மாதங்கள் மிகப்பெரிய பொருளாதார சரிவு ஏற்படும் நிலை உள்ளது. மக்களுக்கு பெரிய அளவில் பண தேவை ஏற்படும். பணம் இருந்தாலும் பொருள் வாங்க முடியாத சூழ்நிலை உருவாகும். இப்படி இருக்கும் நிலையில்தான் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    கனவு கலைத்தது

    கனவு கலைத்தது

    பொருளாதார சரிவு ஏற்பட்டு இருக்கும் நிலையில் பணி நீட்டிப்பு என்பது ஆச்சர்யமான விஷயம். இது பொருளாதார ரீதியாக அவர்களுக்கு உதவும். அடுத்த வருடம் எப்படி சமாளிக்க போகிறோம், எப்படி குழந்தைகள் திருமணத்தை செய்ய போகிறோம் என்று அச்சமடைந்த கொண்டு இருந்த நபர்களுக்கு இந்த அறிவிப்பு கண்டிப்பாக நிம்மதி அளிக்கும். இன்னும் ஒரு வருடம் கவலையின்றி இவர்கள் பணியாற்ற முடியும்.

    வேறு ஒரு வகையில் நிம்மதி

    வேறு ஒரு வகையில் நிம்மதி

    அதேபோல் இன்னொரு பக்கம் அரசு பொருளாதார சரிவு காரணமாக எங்கே தங்களை வேலையைவிட்டு அனுப்பிவிடுவோமோ என்று பலரும் சந்தேகம் அடைந்து கொண்டு இருந்தனர். தனியாரில் இருக்கும் பணி நீக்கம் போலவே செலவை கட்டுப்படுத்துவதற்காக அரசு வேலையிலும் பணி நீக்கம் வந்துவிடுமோ என்று கவலையில் இருந்தனர். சில இளம் அரசு ஊழியர்கள் கூட இந்த கவலையில் இருந்தனர். மூத்தவர்களுக்கான இந்த பணி நீட்டிப்பு தற்போது இளம் ஊழியர்களின் அச்சத்தை போக்கி உள்ளது.

    நிதி சுமை

    நிதி சுமை

    அரசுக்கு ஏற்கனவே அதிக அளவில் கொரோனா ஊரடங்கு மற்றும் மருத்துவ செலவு காரணமாக நிதி சுமை ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த நிதி சுமைக்கு இடையிலும் அரசு இந்த பணி நீட்டிப்பு ஆணையை வெளியிட்டுள்ளது. முதல்வர் பழனிச்சாமி நிதிச்சுமையை பெரிய அளவில் கருத்தில் கொள்ளாமல் துணிச்சலாக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அரசியல் ரீதியாக அவருக்கு இந்த ஒரு உத்தரவு பெரிய வரவேற்பை தேடித்தரும் என்கிறார்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+