ஏழை குடும்ப தலைவர் இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சம் காப்பீடு... இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு!
சென்னை: இடைக்கால பட்ஜெட்டில், தமிழகத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கும் குடும்ப தலைவர் இயற்கையாக மரணம் அடைந்தால் ரூ.2 லட்சம் காப்பீட்டு தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர் மருத்துவ காப்பீட்டுத் திட்ட தொகை ரூ4 லட்சத்தில் இருந்து ரூ5 லட்சமாக அதிகரிப்பட்டுள்ளதாகவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் சென்னை கலைவாணர் அரங்கில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார். எல்.ஐ.சி மற்றும் யுனைடட் காப்பீடு நிறுவனத்துடன் இணைந்து அம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட உள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான முழு நிதியையும் மாநில அரசே ஏற்றுக்கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின்படி தமிழ்நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 55.67 லட்சம் தகுதியான குடும்பங்களில் குடும்ப தலைவர் இயற்கையாக மரணம் அடைந்தால் ரூ.2 லட்சம் காப்பீட்டு தொகை வழங்கப்படும். இதேபோல் தமிழகத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கும் குடும்ப தலைவர் விபத்தில் மரணம் அடைந்தால் ரூ.4 லட்சம் காப்பீட்டு தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசு ஊழியர் மருத்துவ காப்பீட்டுத் திட்ட தொகை ரூ4 லட்சத்தில் இருந்து ரூ5 லட்சமாக அதிகரிப்பட்டுள்ளதாகவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அரிய வகை நோய்கள் மற்றும் அசாதாரண நிகழ்வுகளுக்கு மொத்தம் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் காப்பீட்டு தொகை வழங்குவதற்கு ஒரு சிறப்பு ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications