ஏழை குடும்ப தலைவர் இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சம் காப்பீடு... இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு!
சென்னை: இடைக்கால பட்ஜெட்டில், தமிழகத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கும் குடும்ப தலைவர் இயற்கையாக மரணம் அடைந்தால் ரூ.2 லட்சம் காப்பீட்டு தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர் மருத்துவ காப்பீட்டுத் திட்ட தொகை ரூ4 லட்சத்தில் இருந்து ரூ5 லட்சமாக அதிகரிப்பட்டுள்ளதாகவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் சென்னை கலைவாணர் அரங்கில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார். எல்.ஐ.சி மற்றும் யுனைடட் காப்பீடு நிறுவனத்துடன் இணைந்து அம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட உள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான முழு நிதியையும் மாநில அரசே ஏற்றுக்கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின்படி தமிழ்நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 55.67 லட்சம் தகுதியான குடும்பங்களில் குடும்ப தலைவர் இயற்கையாக மரணம் அடைந்தால் ரூ.2 லட்சம் காப்பீட்டு தொகை வழங்கப்படும். இதேபோல் தமிழகத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கும் குடும்ப தலைவர் விபத்தில் மரணம் அடைந்தால் ரூ.4 லட்சம் காப்பீட்டு தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசு ஊழியர் மருத்துவ காப்பீட்டுத் திட்ட தொகை ரூ4 லட்சத்தில் இருந்து ரூ5 லட்சமாக அதிகரிப்பட்டுள்ளதாகவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அரிய வகை நோய்கள் மற்றும் அசாதாரண நிகழ்வுகளுக்கு மொத்தம் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் காப்பீட்டு தொகை வழங்குவதற்கு ஒரு சிறப்பு ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications